தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium




- 249 -
 
ஒக்குமே யொருவன் சங்கோ டொருநில மாளிகைக் கீழ்த்2
 
திக்கெனத் தொனிசெய் திட்ட தெவ்வழி வந்த தாகும்.

(இ-ள்.) தித்தி - தோல்துருத்தியில், வாயு ஏற்றி -காற்றை அடைத்து, வாய் சிக்கென செம்மி - வாய்ப்புறத்தை இறுக மூடி, தூக்கி - நிறுத்து நோக்கி(ப் பின்னர்), புக்க அவ்வாயு நீங்கிப் போயபின் - அடைக்கப்பட்டிருந்த காற்று வெளிப்பட்டுப் போனபின், நிறை செய்தாலும் - நிறுத்துநோக்கினாலும், ஒக்கும் - எடை ஒருவாறு ஒத்திருக்கும்: ஒரு நில மாளிகைக்கீழ் - பூமியின் கீழுள்ள சுரங்கம்போலும் நிலவறையிலிருந்து, ஒருவன் - ஒரு மனிதன், சங்கொடு - சங்கினால், தொனி செய்திட்டது   -  முழக்கஞ்செய்த ஒலி, திக்கென  - திடீரென, எவ்விழி வந்தது ஆகும் - எந்த வழியால் வந்ததாகும்?  (உயிரும் அதைப்போல் வெளி வருவதாகும்.). (எ-று.)

   முனிவர் உவமை காட்டி  உயிருண்மையைத் தெளிவித்தாரென்க.

   உயிருண்மை காணவேண்டி, கள்வனை வதை செய்யும் முன்னும் பின்னும் நிறைசெய்து (229)  பார்த்தும் காணவில்லையே என்ற வினாவிற்கு மறுமொழியாக, தித்தியுவமம் கூறினார்: மண்ணில் புதைத்தவன்உயிர் சென்ற வழி காணவில்லையே யென்ற வினாவிற்கு, சங்கத்வனியை உவமம் கூறினார்.  தித்தி - துருத்தி செம்முதல் - மூடுதல் தூக்குதல் - நிறுத்துதல்.

அணுத்திரள் அனைத்திற்கும் எடை உண்டு என்று ஆகமத்துக் கூறியிருக்கவும், ஈண்டு (உயிருக்கு  எடை இல்லையென்று)  சண்டகருமனைத் தெளிவிக்கவேண்டி எடையில் மிகக் குறைந்ததான காற்றை உவமையாகக் கூறினாரென்று கொள்க. ‘சிக்கென’ என்பதனை, ‘சிக்கென அடைத்தேன்’ (கம்ப. உலாவியல்,14.) என்பதனோடு ஒப்பிடுக.

232. 
இவ்வகை யாகுஞ் சீவ னியல்புதா னியல்பு வேறாம்
 
வெய்யதீ வினைக ளாலே வெருவுறு துயரின் மூழ்கி

 

2 மாளிகைக்கே.

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:24:56(இந்திய நேரம்)