தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium




- 251 -

எங்கட்கு  - அறிவிலிகளாகிய எங்களுக்கு, பெரிது அரிது - மிக அரிது ; ஏக சித்தத்தர் ஆய - ஒரு வழிப்பட்ட மனத்தராய்த் தியானத்திலமரும், இறைவர்கட்கு - (தங்களைப் போன்ற) ஞானிகளுக்கு, எளிதுபோலும் - மிக எளிதாகலாம்:  (ஆதலின்), போக சித்தத்தோடு ஒன்றி - இன்பம் நுகரும் மனத்தோடு கூடி, பொறிவழிபடரும் நீரார்க்கு-ஐம்பொறிகளின் வழியே செல்லும் தன்மையையுடையவர்களுக்கு, ஆகும் உறுதிக்கு ஏது- ஆகும் நன்மைக்கு உரியமார்க்கத்தை, தெருள அருளுக - விளங்க உரைத்தருள்வீராக, என்றான் - என்று சண்டகருமன் வேண்டினான். (எ-று.)

அடியேனுக்கு, அறத்தை மேற்கொள்ளும் எளிய முறையை அருளுக என்றானென்க.

ஹேது - ஏது என்றாயிற்று.  ஏது - காரணம்: இதனால் இது ஆமெனல்.  ஏக சித்தத்தரைப்போல, போக சித்தத்தராகிய என்போன்றாரும் உண்மைநெறியடைய ஒர் எளியவழியை அருளுக என்று தளவரன் வேண்டினானென்க. (14)

234. 
அற்றமில் லறிவு காட்சி யருந்தகை யொழுக்க மூன்றும்
 
பெற்றனர் புரிந்து பேணிப் பெருங்குணத் தொழுகு வாருக்
 
குற்றிடு மும்ப ரின்ப முலகிதற் கிறைமை தானும்
 
முற்றமுன் னுரைத்த பேறும் வந்துறும் முறைமையென்றான்.

(இ-ள்.) அற்றம்இல்- குற்றமில்லாத, அரும்தகை - அரிய தகவினையுடைய, அறிவு காட்சி ஒழுக்கம் மூன்றும் பெற்றனர் - நல்லறிவு நற்காட்சி நல்லொழுக்கம் என்னும் ரத்னத்ரயத்தையும் அடைந்தவர்களாய், புரிந்து  பேணி-விரும்பிஆதரித்து, பெருங்குணத்து ஒழுகுவாருக்கு-(தர்சன விசுத்தி காட்சியின் தூயதன்மை)  முதலாகிய  பதினாறு பாவனை முதலிய, பெருங்குணத்தில் தவறின்றி ஒழுகும் சான்றோர்க்கு, முறைமை - முறையாக, உம்பர்  இன்பமும் - மறுமையில் தேவேந்திர பதவியும், உலகு  இதற்கு இறைமை தான்உம் - மீண்டும் இவ்வுலகிற்கு அரசனாம் பதவியும், உற்றிடும் -




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:25:16(இந்திய நேரம்)