தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium




- 259 -

கண்ணால் அருள் பெரிது ஒழுகி - கண்களில் கருணை மிக்கு நீர்வார, ஓர்உயிர்போல - தன்னுயிரே போல, நெஞ்சத்து உருகி நைந்து - உள்ளம் உருகி இரங்கி, உய்ய நிற்றல் - அவை ஈடேறுமாறு காத்தல்,வாரியின்வதங்கட்கு எல்லாம் - (அறப்பயனுக்கு) வருவாயாகவுள்ள விரதங்க ளனைத்திற்கும்,  அரசவதம் - தலையாய விரதம்,இதற்கே - இக்கொல்லா விரதத்தைப் போற்றிக் காப்பதற்கே, தகவுஉம் - நடுநிலையும், அத்தயவு உம் - (அறத்திற்கு மூலமாகிய) கருணையும், சார்துணையாகக்கொள்க - உற்ற துணையாகக் கொள்வாயாக, என்றான் - என்று முனிவர் கூறினார்.  (எ-று..)

ஐய, தலையாய விரதமாகிய கொல்லா விரதத்தை மேற்கொள்வதோடு அதனுக்கே துணையாக   நடுநிலையையும் கருணையையும் மேற்கொள்க வென்றா ரென்க.

‘மன்னுயிர் வருத்தங்கண்டும் வாழ்வதே வலிக்குமாயின், அன்னவ னாண்மையாவ தலிபெற்ற வழகுபோலாம்‘என்றார் ஆதலின்,  மன்னுயிரைத் தன்னுயிராகக் கருதிக்காத்தல் வேண்டு மென்றார். நைதல் - இரங்குதல் :  ‘நீ நல்காமையி னைவரச்சாஅய்‘ (புறம். 146).  வாரி - வருவாய்.அரசவதம் - தலையாய விரதம். மா, அசை:  ‘அனங்கமா ’வீணை‘ என்றாற்போலக் கொள்க.  மா-சிறந்ததெனினுமாம்.‘யானையடியு ளடங்காதனவில்லை,  ஏனையவற்றடிகள் யாவையும் - ஊனுயிரைக், கொல்லாவதத்தின் கொழுநிழலுள்பட்டடங்கும், எல்லாவதமு மியைந்து‘ என்றார் பெருந்தேவனாரும்.  (பாரதம்.) கொலைக்குற்றந் தவிர்தற்குக்கருணையே துணையென்பார், ‘சார்துணை‘ யென்றார்.  சார் துணை - சேருந் துணை.  தகவும் தயவும் என்பன, ஒன்றையொன்று தழுவிய எச்ச உம்மைகள்.  தகவு  - நடுவு நிலை: ‘தக்கார் தகவிலார் என்பது...  காணப்படும்‘  என்னுங்குறளைக் காண்க. (21)

241. 
இறந்தா ளென்றுமுள்ளத் திரங்குத லின்றி வெய்தாய்க்
 
கறந்துயி ருண்டு கன்றிக் கருவினை பெருகச் செய்தாய்



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:26:35(இந்திய நேரம்)