தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium




- 260 -
 
பிறந்துநீ, பிறவி தோறும் பெருநவை யுறுவ தெல்லாஞ்
 
சிறந்தநல் லறத்தி னன்றித் தீருமா றுளது முண்டோ.

(இ-ள்.) (ஐயனே!) இறந்தநாள் என்றும்  - கடந்த நாட்களிலெல்லாம், உள்ளத்து இரங்குதல் இன்றி - நின்மனத்தில் இரக்கமின்றி, வெய்துஆய் - கொடுமையாக, உயிர்கறந்து உண்டு - உயிரைப் பிரித்து(க்கொன்றும் அதன் ஊனை) உண்டும், கன்றி - (அதிலேயே)  மிகுதியும் அடிப்பட்டு, கரு வினை - (பிறவிக்கு உரித்தாகிய) தீவினைகளை, பெருகச் செய்தாய் - அதிகமாகச் செய்திருக்கிறாய், (அதனால்), நீ --, பிறவிதோறும் பிறந்து - பல பிறவிகளிலும்பிறந்து, பெருநவை உறுவது எல்லாம் - மிக்க துன்பங்களெய்துவதெல்லாம், சிறந்த நல் அறத்தின் அன்றி -திருவறமாகிய அந்த அஹிம்ஸையாலன்றி, தீரும் ஆறு   உளது உம் உண்டோ - (ஏனைய  விரதங்களால் அத்துன்பங்கள்) தீரும் வகையாக இருப்பதும் ஒன்று  உண்டோ? இல்லையென்றபடி.

கொலையால் வந்த பாபம் அறத்தாலன்றித் தவிராதென்றா ரென்க.

இறந்த - கடந்த.  இரங்குதல் - மனமழிதல், கறந்து -துன்புறுத்திப் பிரித்து: ‘கறந்து கூற்றுண்ணும’  (சீவக.2616). தான் ஈட்டிய வினைகளைத் தானே துய்க்க வேண்டுமாகலின், ‘பிறந்து...உறுவது’ என்றார்.  நிச்சயமாகவேறொன்றால் தவிரா தென்றதற்கு, ‘உளதும் உண்டோ’ என்று வற்புறுத்தினார்.  ‘இன்றுயிர்கொன்ற பாவத் திடர்பல விளையுமேலால், நன்றியொன் றன்று’ என்றார் (யசோ.135) முன்னரும்.   (22)

242. 
நிலையிலா வுடம்பின் வாழ்க்கை நெடிதுட னிறுவ வென்றிக்
 
கொலையினான் முயன்று வாழுங் கொற்றவ ரேனு முற்றச்
 
சிலபக லன்றி நின்றார் சிலரிவ ணில்லை கண்டாய்
 
அலைதரு பிறவி முந்நீ ரழுந்துவ ரனந்தங் காலம். 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:26:45(இந்திய நேரம்)