தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium




- 273 -

(இ-ள்). உயிர்க்கு இதத்தினை இனிது அளித்திடும் இயற்கை - உயிர்கட்கு அறவுரையாகிய நன்மையை இனிதாக நல்கும் இயல்புடைய, சுதத்தமுனி -சுதத்தாசார்யர் என்னும் முனிவரராய, தொத்து இரு வினைத்துகள் உடைக்கும் - திரளாகிய (காதி அகாதி யென்ற)  இருவினைகளாகிற அணுத்திரள்களை அழிக்கும், பதத்து - நிலையினையுடைய, அயன் - சிரேஷ்டர், மதக் களிறு என  - ஓர் மதயானைபோல, படிமம் நிற்ப - பிரதிமா யோகத்தில் நிற்க, (திகம்பரனாகிய முனிவரனைக் காணல் சகுனத்தடையென் றெண்ணிய வேந்தன்), கதத்துடன் - கோபத்துடன், இழித்து - இழித்துரைத்து, அடு கடத்திடை - விலங்குகளைக் கொல்லுதற்கான காட்டி, னிடத்தை, மடுத்தான் -(தன் சேனைகளோடு) அடைந்தான்.

முனிவரராய சிரேஷ்டர் படிமம் நிற்கக் கண்ட மன்னன் வெகுண்டு வேட்டைக்கு வனத்தில் சென்றான் என்க.

இதம் - ஹிதம்:  வடசொல்.  தொத்து - உயிரைத் தொத்திக்கொண்டுள்ள (இருவினை)  எனினுமாம்.  பிறவிக்குக் காரணமாதலின் இருவினைத் துகள் என்றார்.  துகள் -அணு. அயன் - ஐயன்:  போலி.  ‘கானயானை போல மூன்று காலயோகு தாங்கினான்‘ (மேரு.428) என்பதை ஈண்டு ஒப்பிடுக. படிமை -ப்ரதிமை.  ‘எஞ்சலில் கொள்கை தாங்கி யிராப்பகல் படிமம் நின்றான்‘ என்றார் (மேரு. 141ல்)  வாமன முனிவரும்.  மடுத்தல் - உட்புகுதல். (37)

257. 
கூற்றமென வடவிபுடை தடவியுயிர் கோறற்
 
கேற்றபடி பெற்றதில னிற்றைவினை முற்றும்
 
பாற்றியவ னின்னுயிர் பறிப்பனென வந்தான்
 
மாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே.

(இ-ள்) (வேட்டை மேற்சென்ற யசோமதி), கூற்றம் என - யமனேபோல, அடவி புடை தடவி - காடெங்கும் தேடியும், உயிர் - விலங்குயிர்களை, கோறற்கு - கொல்வதற்கு, ஏற்றபடி - ஏற்ற வகையில், பெற்றது இலன் - பெற்றிலன்: (அதனால்), இற்றை வினைமுற்றும் பாற்றியவன் - இன்றைத் தொழில் முழுவதும் கெடுத்த முனிவனுடைய, இன்உயி்ர்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:28:53(இந்திய நேரம்)