தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium




- 272 -

திருந்தான் என்று கொள்ளப்படும். மிசை - மேல். கடாவுதல் - செலுத்தல். வரிசை - முறை கிராமம்.  (35)

255. 
நூற்படு வலைப்பொறி முதற்கருவி நூற்றோ
 
டேற்றிடை யெயிற்றுஞம லிக்குல மிரைப்ப
 
நாற்படை நடுக்கடல் நடுச்செய் நமனேபோல்
 
வேற்படை பிடித்தரசன் வேட்டையின் விரைந்தான்.

(இ-ள்.) நூல் படு  வலைப் பொறி முதல் - (உயிர்கள் படுதற்குக் காரணமான)  நூலால் சமைத்த   வலையாகிய யந்திரங்கள் முதலாகவுள்ள, கருவி நூற்றோடு  - படைக்கருவிகள் பலவற்றுடன். ஏற்று - கைக்கொண்டு, இடை எயிற்று ஞமலிக்குலம் இரைப்ப - இடையே (கூரிய)  பற்களையுடைய வேட்டை நாய்களின் கூட்டம் குரைக்க, நாற் படைகடல்நடு - நால்வகைச் சேனைப்படைகளாகிய கடலின் நடுவே, நடுச்செய் நமனேபோல் - ( பிராணிகள் திறத்தில்)  நடுவு நிலையுடனே தன் தொழிலைச் செய்கின்ற யமனைப்போல, அரசன் - வேந்தனாகிய யசோமதி, வேல் படை பிடித்து - வேலாயுதத்தைக் கையில் ஏந்தி, வேட்டையின் விரைந்தான் - வேட்டையாடுதற்கு  விரைந்து சென்றான்.  (எ-று.)

அரசன், சேனையுடன் வேட்டைக்குச் சென்றானென்க

பொறி - பிராணிகளை அகப்படுத்தும் பொறி : யந்திரம். கருவி, வேட்டைக்கு வேண்டிய கருவிகள்:  குந்தம் ஈட்டி முதலியன.  நூறு - ஈண்டு பலவென்னும் பொருளது.ஏற்றிடை யென்பதை இடை ஏற்று என மாற்றி, பிராணிகளை இடையில் எதிர்த்து எனினுமாம்.  நாற்படை:  யானை, தேர், குதிரை, காலாள் என்பன.  சேனைகளைக் கடலாகக் கூறுதல் மரபு.  ஞமலி: திசைச்சொல். யமனுடைய பெயர் நடுவன்: சமவர்த்தி எனவும் கூறப்படும்.   (36)

256. 
இதத்தினை யுயிர்க்கினி தளித்திடு் மியற்கைச்
 
சுதத்தமுனி தொத்திரு வினைத்துக ளுடைக்கும்
 
பதத்தயன் மதக்களி றெனப்படிம1 நிற்பக்
 
கதத்துட னிழித்தடு கடத்திடை2 மடுத்தான்

 

1

படிவ,
2
கடத்திட

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:28:43(இந்திய நேரம்)