தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 277 -
261. 
வெறுத்துடன் விடுத்தரசி னைத்துக ளெனப்பேர்
 
அறப்பெரு மலைப்பொறை யெடுத்தவ னடிக்கண்
 
சிறப்பினை யியற்றிலை சினத்தெரி மனத்தான்
 
மறப்படை யெடுப்பதுவென் மாலைமற வேலோய்.

(இ-ள்) மாலை மறம் வேலோய் - வெற்றிமாலை புனைந்த வீரவேலேந்திய வேந்தே, அரசினை துகள் என வெறுத்து -அரசச் செல்வத்தினை அற்பமென்று வெறுத்து,  உடன் விடுத்து - (இல்லறப்பற்று அனைத்தையும்)  ஒருங்கே விட்டுத் துறந்து, பேர் அறப் பெருமலை பொறை எடுத்தவன் - சிறந்த தருமமாகின்ற பெரிய  மலைபோன்ற தபோபாரத்தினைத் தாங்கின முனிவனது.  அடிக்கண் - திருவடிக் கண், சிறப்பினை இயற்றிலை - சிறந்த பூசனை செய்யாமல், சினத்து எரிமனத்தால் - கோபக் கனலையுடைய உள்ளத்தோடு, மறப்படை எடுப்பதுஎன் - வலிய  வாளோங்குவது என்னை?

முனிவனை வணங்குவதைவிட்டுப் பிணங்குவது யாது காரண மென்றானென்க.

அரசு தவம் முதலியவற்றையும் பாரமெனக் கூறுதல் மரபு: ‘அருந்தவ மரசபார மிரண்டுமே யரிய.‘ சூளா. 271. வேலுக்கு மாலை சூடுதல் மரபு.  மாலை - இயல்புமாம்.  துகள் - அற்பம் என்னும் பொருளது.  (42)

262. 
ஆகவெனி னாகுமிவ1 ரழிகவெனி னழிப2
 
மேகமிவண் வருகவெனின் வருமதுவும் விதியின்
 
ஏகமன ராமுனிவர் பெருமையிது வாகும்
 
மாகமழை வண்கைமத யானைமணி முடியோய்.

(இ-ள்.) மாக மழை வண்கை மத யானை மணிமுடியோய் - வானத்துள்ள மழைபோன்று கொடுக்கும் கையையும் மதத்தோடு கூடிய யானையையும் மணிமுடியினையுமுடைய வேந்தே, இவர் - இம்முனிவர், ஆக எனின் ஆகும் - ஒரு பொருளைக் குறித்து இது) விருத்தி அடைக என்பாராயின் அங்ஙனமே விருத்தியடையும்:  அழிக எனின் அழிப-

 

1 னாகவிவ.

2 ரழிய வெனி லழிக.

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:29:32(இந்திய நேரம்)