தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium



- 278 -

கெடுக என்றால் அவ்வாறே கெட்டொழியும் ;  இவண் மேகம் வருக எனின் - இவ்விடத்தில் மழைபொழிக என்பாராயின், அதுவும் விதியின் வரும் - அம் மேகமும் கிரமமாக வந்து மழை பொழியும், ஏக மனராம் முனிவர் பெருமை இதுவாகும் - தவத்தில் ஒன்றிநிகழும் ஒரே மனமுடைய இம் முனிவரரின் பெருமை இத்தன்மைய தாகும்: (எ-று.) 

வணிகன், முனிவரர் பெருமை இதுவாகும் என்று எடுத்துக்கூறினான் என்க.

‘ஆவ தற்கும் மழிவதற்கும் மவர், ஏவ நிற்கும் விதியும்,‘ (கம்பர், மந்தரை சூழ்ச்சி. 10.) என்பதை ஈண்டு ஒப்பு நோக்குக. (ஒருவர் கெடுமாறு)  முனிவரர் உரைத்தால் அங்ஙனமே ஆகும்: ஆயினும், அவ்வாறு செய்யின் முனிவரர் தன்மைக்கு இடையூறாகுமாதலின் கையாளுவதில்லை யென்றுணர்க.  இதனை ஸ்ரீராணம் 278-ஆம் பக்கத்தில் காண்க. கைமாறு கருதாமையின் வானமழை போலும் கை என்றார்.

263. 
அடைந்தவர்கள் காதலினொ1 டமரரச ராவர்
 
கடந்தவர்கள் தமதிகழ்வில் கடைநரகில் வீழ்வர்
 
அடைந்தநிழல் போலருளு முனிவுமில ரடிகள்
 
கடந்ததிவ ணுலகியல்பு கடவுளவர் செயலே.

  (இ-ள்.) (இம்முனிவரரை), காதலினொடு அடைந்தவர்கள் - பக்தியோடு சேர்ந்தவர்கள், அமர் அரசர் ஆவர் -தேவேந்திர ராகுவர்:  தமது இகழ்வில் கடந்தவர்கள் - தாங்கள்கொண்ட இகழ்ச்சியினால் நீங்கியவர்கள், கடை நரகில் வீழ்வர் - ஏழாம் நரகத்தில் வீழ்ந்து (பிறந்து) துன்புறுவர்:  (ஆயினும்), அடிகள் இம்முனிவரர், அடைந்த நிழல் போல் அருளும் - (வெப்ப முற்றார்) அடைந்த நிழல் போலக் குளிர்ந்த அருளும், முனிவும் இலர் - வெகுளியும் இல்லாதவர்: (அதுவேயுமன்றி), கடவுள் அவர் செயல் - முனிவரர்களின் செய்கை, அவண் உலகஇயல்பு கடந்தது - இவ்வுலக மக்களின் இயல்பைக் கடந்ததாகும்.

 

1 காதலின.

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:29:42(இந்திய நேரம்)