Primary tabs
இம்முனிவரரை வணங்கி நன்மை பெறுக என்றானென்க.
மன்னுயிரைத் தம்முயிர்போல் கருதுதல் பெரியோர்க்கியல்பு. அவ்வியம் அன்பின்மையின் நிகழும் மனக்கோட்டம். (சீவக. 394ல்) ‘அவ்வியம்-மனக்கோட்டம்’ என்ற உரை காண்க. கடத்தல் - நீக்குதல். உயி்ர் விளங்குதல், சுத்தாத்மத் தன்மையைப் பெறுதல். (46)
(இ-ள்.) என்று இனிது கூறும் வணிகன் சொல் - என்றிவ்வாறு இனிமை பெறக் கூறும் வணிகனது நற்போதனையை, இகழாது - (மன்னன்) இகழாது மேற் கொண்டு, கன்று சினமும் கரதலப்படையும் மாற்றி - மனத்துட்கொண்ட கடுஞ்சினத்தையும் கையிற்பிடித்த வாளையும் நீக்கி, கன்று துகள் துன்று கரு மேனியினன் - மிக்க புழுதிபடிந்து கறுத்த மேனியினனாகிய, அளியன் யாவன் - அளிக்கத் தக்க இம்முனிவன் யாவன்? இன்று - இப்போது, இவனை - -, தொழுமாறு என்னை - யான் தொழுவது எங்ஙனம்? என்றான் - என்று வணிகனை) வினாவினான். (எ-று.)
அம் முனிவன் யாவனென்றும் அரசனாகிய தான் வணங்குவது எங்ஙனம் என்றும் வினாவினானென்க.
கன்றல் - மிகுதல் கரதலம் - வடசொல். அளியன் - இரங்கத் தக்கவன்: எளியன் என்றுமாம், துன்றுதல் - படிதல், மாற்றல் - கோபத்தைத் தணித்தல், வாளை உறையிற் செருகல். (47)