தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 281 -

இம்முனிவரரை வணங்கி நன்மை பெறுக என்றானென்க.

மன்னுயிரைத் தம்முயிர்போல் கருதுதல் பெரியோர்க்கியல்பு.  அவ்வியம்  அன்பின்மையின் நிகழும் மனக்கோட்டம். (சீவக. 394ல்) ‘அவ்வியம்-மனக்கோட்டம்’ என்ற உரை காண்க.  கடத்தல் - நீக்குதல்.  உயி்ர் விளங்குதல், சுத்தாத்மத் தன்மையைப் பெறுதல். (46)

266. 
என்றினிது கூறும்வணி கன்சொலிக ழாதே
 
கன்றுசின முங்கர தலப்படையு மாற்றி
 
இன்றிவனை யென்னைதொழு மாறளியன் யாவன்
 
கன்றுதுக டுன்றுகரு மேனியின னென்றான்.

(இ-ள்.) என்று இனிது கூறும் வணிகன் சொல் - என்றிவ்வாறு இனிமை பெறக் கூறும் வணிகனது நற்போதனையை, இகழாது - (மன்னன்) இகழாது மேற் கொண்டு, கன்று சினமும் கரதலப்படையும் மாற்றி - மனத்துட்கொண்ட கடுஞ்சினத்தையும் கையிற்பிடித்த வாளையும் நீக்கி, கன்று துகள் துன்று கரு மேனியினன் - மிக்க புழுதிபடிந்து கறுத்த மேனியினனாகிய, அளியன் யாவன் - அளிக்கத் தக்க இம்முனிவன் யாவன்? இன்று - இப்போது, இவனை - -, தொழுமாறு என்னை - யான் தொழுவது எங்ஙனம்? என்றான் - என்று வணிகனை) வினாவினான்.  (எ-று.)

அம் முனிவன் யாவனென்றும் அரசனாகிய தான் வணங்குவது எங்ஙனம் என்றும் வினாவினானென்க.

கன்றல் - மிகுதல் கரதலம் - வடசொல். அளியன் - இரங்கத் தக்கவன்: எளியன் என்றுமாம்,  துன்றுதல் - படிதல்,  மாற்றல் - கோபத்தைத் தணித்தல்,  வாளை உறையிற் செருகல். (47)

267. 
இங்குலகு தொழுமுனியை யாவனெனி னிதுகேள்
 
கங்கைகுல திலகனிவன் கலிங்கபதி யதனைப்
 
பொங்குபுய வலியிற்பொது வின்றிமுழு தாண்ட
 
சி்ங்கமிவ னென்றுதெளி தேர்ந்துணரின் வேந்தே.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:30:11(இந்திய நேரம்)