தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 287 -

இயம்பல் - சொல்லல்.  பிழை - நாய்களைச்  செலுத்தியதும் வாளோங்கியதும்   முதலாயின, அணியா,   செய்யாவென்னும் வாய்ப்பாட்டு எச்சம்.   (54)

274. 
இன்னதுநி னைந்ததிவ னென்றுகை யெடுத்தே
 
மன்னநின் மனத்தது விடுத்திடு மனத்தில்
 
தன்னுயிரின் மன்னுயிர் வளர்க்கைதக் வானால்
 
நின்னுயிரை நீகளையி னின்னருள தென்னாம்.

(இ-ள்.) (சுதத்த முனிவர்), இவன் நினைந்ததுஇன்னது என்று - இம்மன்னன் நினைத்தது தற்கொலை புரிதலாகும் (என்று அறிந்து அதனைத் தடுக்காவிடின் தம்மையும் பாவஞ் சேரும்) என்று எண்ணி, கை எடுத்து - யோகநிலை கலைந்து, மன்ன - வேந்தே! ‘நின்மனத்தது விடுத்திடு  - நின்மனத்திலுள்ள எண்ணத்தைத் தவிர்வாயாக:  மனத்தில் -ஒருவன் மனத்தில்,  தன் உயிரின் - தன உயிர்போலவே, மன் உயிர்வளர்க்கை - நிலைபேறுடைய பிறவுயிர்களையும் பேணி வளர்ப்பதுவே, தகவு ஆனால் - தகுதியாகுமாயின், நின் உயிரை - உன் உயிரை,  நீ  களையின்  -  நீயே மாய்த்துத்கொள்ளின், நின்அருள் அது - நினது அருட்டிறம்,  என் ஆம் - என்னாகும்? (எ-று.)

முனிவர்,  தற்கொலை  நிகழ்த்தாவாறு  அரசனைத்தடுத்தாரென்க.

முனிவர்கள் பத்மாசானமாக உட்கார்ந்தும் காயோத்சர்க்கமாக நின்றும் கைமுதலிய அவயவங்கள் அசையாமலும், வேறு விஷயங்களில் மனம் செல்லாமலும் யோகத்தில் (தியானத்தில்) பொருந்துவர்:அங்ஙனம் யோகம் மேற்கொள்ளுவதை ‘கையிடுதல்’ என்றும், யோகம் கலைவதைக் ‘கையெடுத்தல’ என்றும் கூறுதல் மரபு. ஆதலின் தற்கொலைபுரியாதவாறு அரசனைத் தடுக்கவேண்டி யோகத்தில் கலைந்ததனை, ‘கையெடுத்து’ என்று கூறினார்.  நீலகேசி, 315-ஆவதுசெய்யுளில், ‘பாவங்கெடுகெனக் கையிட்டு நின்ற’ தென்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:31:10(இந்திய நேரம்)