Primary tabs
பதையும்: உரையில், பாவங்கொட ப்ரதிக்ரமணம் சொல்லிப்படிவம் நிற்றல் என்றிருப்பதையும் காண்க. ‘ நின்னுயிரை நீகளையின் இன்னருளதென்னாம்‘ என்று பிரித்துப் பொருள்கூறலும் அமையும். இன்அருள் - யாவருக்கும் நன்மைசெய்யும் அருள். ‘அருளது‘ என்பதில், ‘ அது‘ பகுதிப்பொருள் விகுதி என்று வழங்கும். (55)
(இ-ள்.) முன்னம் உரைசெய்த பொருள் முடிந்திலது - முன்னர் (265 ல்) வணிகனால் கூறிய பொருள்இன்னம் முடியவில்லை: முடிய - அது முடிவதற்கு, பின்னும்-மேலே, உரை பிறவும் பேசுதிறம் நினைவும் மிகை - உரைக்க வேண்டிய பிற அறவுரைகளும் அதனை நினைக்கவேண்டிய தியானமும் மிகுதியாயுள்ளன : (அவற்றைவிட்டு) முன் துன் உயிரின் இது துணிந்த பிழை - (நின்) முன்னர்த் தோன்றிய எம்மை மாய்க்கக் கருதிய இப்பிழையை, தூர - தூர்க்கவேண்டி (பரிகரிக்கவேண்டி), பின்னை நினைகின்ற இது - மீண்டும் நின்னை நீயே தற்கொலை புரிவதாகக் கருதுகின்ற இது, பெரிதும் பிழை - பெரும் பிழையாகும், என்றான் - என்று முனிவரர் கூறினார். (எ-று.)
முனிவர் மன்னன் பிழைகளை எடுத்தோதினாரென்க.
‘முன்னம்‘ என்றது, 265-ல், ‘செவ்விமையி்ன் நின்றவர் திருந்தடி பணிந்துன், வெவ்வினை கடந்து‘ என்று கூறியதனை நோக்கியாகும். மிகை - அதிகம் திறம்-உறுதி. துன் - நெருங்கிய. ஏனையகொடிய தீயசெயல்களைவிடத் தற்கொலை செய்துகொள்ள எண்ணுபவர்களும் செய்துகொண்ட
1 மிசை.
2 முள
3 துன்னவயின், துன்னியிரின
4 தூராப்