Primary tabs
எய்தக்கடவாதாகிய துன்பத்திற்கு முடிவுதான் யாதாகுமோ! அருளுக என்ன - தெளியவுரைப்பீராக என்று, கலங்கினான் வீழ - மனங்கலங்கி அவர்திருவடிகளில் வீழ்ந்து வணங்க, அம் மாதவன் - அந்தப் பெருமையுடைய முனிவரர். மாவல - குதிரையினை நடத்துதலில் வல்லவனே, அஞ்சல் என்று - அஞ்சாதே யென்று அபயமளித்து, உரை வளர்த்தான் - மேலும் சொல்லத் தொடங்கினார். (எ-று.)
வணங்கிய மன்னனுக்கு முனிவர் அபயமளித்தாரென்க.
பலியிடத் தூண்டிய சந்திரமதியையும் உட்படுத்தி ‘வதைசெய்தார்‘ என்று பன்மையாகக் கூறினார். ஏதும்-ஒன்றுக்கும். அவதி - எல்லை. காவல-எவ்வுயிர்க்கும் ரக்ஷகரேஎனவுமாம். கலங்கினன், முற்றெச்சம். மா - யானையுமாம்.
(இ-ள்.) ஐய - ஐயனே! அறிவு இலர் ஆய காலத்து - மக்கள் நல்ல அறிவு இல்லாதவராயி்ருந்த காலத்தில், அமைவு இல செய்த எல்லாம் - தகாதவற்றைக் கருதிச் செய்த செயல் முதலிய யாவும், நெறியினில் அறிவது ஊற - (புனித) ஆகம நெறியில் நல்லறிவு வளரவே, நின்ற அவை விலகி -(தீயசெயலால் முன் பந்தித்து) நின்ற அத்தீவினைகள் (உபஸ்மமெய்திப் பயனளிக்காமல் அடங்கி) விலக, நிற்பர் - (இன்பத்தில்) நிலைபெறுவர்: அறியலர் - அறத்தின்திண்மை அறியாமல், வினைகளால் - (செய்த) தீவினைகளினால், அருநவை படுநர்க்கு - பொறுத்ததற்கரிய துன்பமுற்றவர்களுக்கு, சிறிய நல் வதங்கள் செய்த - அணுவிரதங்கள் அருளிய, திருவினை - நன்மையை, நுமர்கண் காணாய் - நும்மவரிடத்தே கண்டு தெளிவாயாக. (எ-று.)
ஞானம் எய்தினவர் தீவினை யகல்வ ரென்றாரென்க.
1 அறிவில செய்த.
2 தெல்லா.
3 ஐயா.