தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium

பக்க எண்: - 308 -


எய்தக்கடவாதாகிய துன்பத்திற்கு முடிவுதான் யாதாகுமோ! அருளுக என்ன - தெளியவுரைப்பீராக என்று, கலங்கினான் வீழ - மனங்கலங்கி அவர்திருவடிகளில் வீழ்ந்து வணங்க, அம் மாதவன் - அந்தப் பெருமையுடைய முனிவரர். மாவல - குதிரையினை நடத்துதலில் வல்லவனே, அஞ்சல் என்று - அஞ்சாதே யென்று அபயமளித்து,  உரை வளர்த்தான் - மேலும் சொல்லத் தொடங்கினார்.  (எ-று.)

வணங்கிய மன்னனுக்கு முனிவர் அபயமளித்தாரென்க.

பலியிடத் தூண்டிய சந்திரமதியையும் உட்படுத்தி ‘வதைசெய்தார்‘  என்று பன்மையாகக் கூறினார்.  ஏதும்-ஒன்றுக்கும். அவதி - எல்லை.  காவல-எவ்வுயிர்க்கும் ரக்ஷகரேஎனவுமாம். கலங்கினன், முற்றெச்சம். மா - யானையுமாம்.

299. 
அறிவில ராய காலத் தமைவில செய்த1 வெல்லாம்2
 
நெறியினி லறிவ தூற நின்றவை விலகி நிற்பர்
 
அறியலர் வினைக ளாலே யருநவை படுநர்க் கைய3
 
சிறியநல் வதங்கள் செய்த திருவினை நுமர்கட் காணாய்.

(இ-ள்.) ஐய - ஐயனே! அறிவு இலர் ஆய காலத்து - மக்கள் நல்ல அறிவு இல்லாதவராயி்ருந்த காலத்தில்,  அமைவு இல செய்த எல்லாம் - தகாதவற்றைக் கருதிச் செய்த செயல் முதலிய யாவும்,  நெறியினில் அறிவது ஊற - (புனித) ஆகம நெறியில் நல்லறிவு வளரவே, நின்ற அவை விலகி -(தீயசெயலால் முன் பந்தித்து) நின்ற அத்தீவினைகள் (உபஸ்மமெய்திப் பயனளிக்காமல் அடங்கி) விலக,   நிற்பர் - (இன்பத்தில்) நிலைபெறுவர்: அறியலர் - அறத்தின்திண்மை அறியாமல், வினைகளால் -  (செய்த) தீவினைகளினால், அருநவை படுநர்க்கு - பொறுத்ததற்கரிய துன்பமுற்றவர்களுக்கு, சிறிய நல் வதங்கள் செய்த - அணுவிரதங்கள் அருளிய, திருவினை - நன்மையை,  நுமர்கண் காணாய் - நும்மவரிடத்தே கண்டு தெளிவாயாக.  (எ-று.)

ஞானம் எய்தினவர் தீவினை யகல்வ ரென்றாரென்க.

 

1 அறிவில செய்த.

2 தெல்லா.

3 ஐயா.

 




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:34:36(இந்திய நேரம்)