தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 311 -

அறிவு காட்சி சென்றனன் - மனத்தில் நன் ஞானமும் நற்காட்சியும் அறிந்து நம்பினவனாகி, திருவறத்து -ஜினதருமத்தில், ஒருவன் ஆனான் -  ஒப்பற்றவனானான், வென்றவர் சரண் அடைந்தார் - வினைகளைவென்ற முனிவர்களின் திருவடிகளை அடைந்தவர்,  விளைப்பது - விளைவித்துக் கொள்வது, வென்றியன்றோ - வினைகளை வெல்லும் வெற்றியேயன்றோ?(எ-று.)

யசோமதி மன்னன் திருவறத்தை மேற்கொண்டாளென்க.  கன்றிய வினை - அடிப்பட்ட தீவினை.  செல்லுதல் என்பது அறிதல் என்னும் பொருளில்வந்தது.  செல்லுதற்பொருளில் வருஞ் சொற்களெல்லாம் அறிதற் பொருளையும் தரும் என்பது வடநூற் கொள்கை.  ‘சென்றான்‘ (சூளா.1.)

302. 
வெருள்செயும் வினைக டம்மை வெருவிய மனத்த னாகி
 
மருள்செயு முருவ மாட்சி மகனொடு மங்கை தன்னை
 
அருள்பெரு குவகை தன்னா லமைவில னளிய னும்மைத்
 
தெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க வென்றான்

(இ-ள்.) அருள்பெருகு உவகை தன்னால் அமைவு இலன் - அருட்குணம் மிகுதலால் உண்டாகிய உவகையால் (தந்தையாகிய தனது நிலையில்)  அமையானாகிய அவ்யசோமதி, வெருள் செயும் வினைகள் தம்மை - (தான் செய்த) அச்சந்தரும் தீய வினைகளை, வெருவிய மனத்தன் ஆகி - அஞ்சிய உள்ளத்தனாகி,  மருள் செயும் உருவம் மாட்சி மகனொடு - கண்டார் மருளச் செய்யும் உருவப் பெருமையினையுடைய மகனோடு, மங்கை தன்னை - புதல்வியையும் (நோக்கி), அளியன் - இரங்கத் தக்க யான்,  நும்மை - நும்மிருவரையும், தெருளலன் முன்பு செய்த - தெளியாமல் நுமது முன்பிறவிகளிற் செய்த,  சிறுமைகள் - பிழைகளை, பொறுக்க என்றான் - பொறுத்தருள்வீராக என்றான்.

மன்னன், மக்களைப் பிழைபொறுக்க வேண்டினா னென்க.முன்பிறவி - மயில் நாய் ஆடு முதலிய பிறவிகள், உருவ மாட்சி இருவருக்குங் கொள்ளலாகும்.                                       (83)




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:35:06(இந்திய நேரம்)