Primary tabs
(இ-ள்.) மன்னன் - யசோமதி யரசன், ஓர் உயிர்த்தோழன் ஆகி - தனக்கு ஒப்பில்லாத உயிர்த்தோழனாகி, உறுதி சூழ் வணிகன்தன்னை - நன்மையை ஆராய்ந்து உரைத்த வணிகனை நோக்கி, ஐய - ஐயனே, எனக்கு-அறிவிலியாகிய எனக்கு, ஆர் உயிர்க்கு அரணம் ஆயஅடிகளோடு-உயிர்கட்கு இரட்சகராகிய இம்முனிவரோடு, நீயும் - ----, நேர் - சமம்: இறைவனாக நினைவல் - (உன்னையும்) ஆசார்யனாகவே நினைப்பேன், என்று - --, இனிய கூறி - இனிய மொழிகளைக் கூறி, பார் இயல் பொறையை - நிலத்தைச் சார்ந்த அரசபாரத்தினை, நெஞ்சில் - மனத்தில், பரிந்தனன் ஆனான் - பற்றின்றி விட்டவனானான். (எ-று.)
நண்பனைப் புகழ்ந்து துறவு கொள்ளக் கருதினானென்க.
உயிர்த்தோழன் - உடலால் இருவராயினும் உயிரால் ஒருவரேயெனக் கூறத் தக்க நண்பன். உறுதி சூழ்தல் - நல்லறத்தை ஆராய்ந்து கூறுதல். இறைவன் - ஞானசிரியன். நினைவல்: ‘அல்‘ தன்மை யொருமை விகுதி. (84)
(இ-ள்.) மன்னவன் - யசோமதி , மணிமுடி - ரத்னகிரீடத்தை [அரச பதவியை], மகனுக்கு ஈந்து - தன் புதல்வனாகிய அபயருசிக்குக் கொடுத்ததனால், தன்னோடு - அவனோடு, ஏனை அணிமுடி அரசர்தாமும் - அழகிய முடியணிந்த மற்ற அரசர்களும், அவன் உயிர்த துணைவன் ஆய - அவனுக்கு உயிர்த்தோழனாகிய, வணிகனும் - கல்யாண மித்திரனென்னும் வணிகனும், மற்றுளாரும் - மற்றும் பலரும், மாதவத்து இறையை