தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 313 -

வாழ்த்தி - தவவேந்தராகிய சுதத்தமுனிவரைத் துதித்து, துணிவினர் - துணிவுடையவராய், துறந்து -அகப்பற்று புறப்பற்றுக்களை நீக்கி,  மூவார் தொழுது எழும் - தேவரும் வணங்கி யெழும், உருவம் கொண்டார்.  (திகம்பர) வடிவத்தை மேற்கொண்டார். (எ-று.)

யசோமதியும் மற்றும் பலரும் தீக்ஷைகொண்டாரென்க.

உறுதி சூழ்ந்தவனாதலின் உயிர்த்தோழனென்றார். மூவார்:  மூப்பு அடையாதவர்: தேவர் ‘மூவார் தொழு தெழும் வடிவங்கொண்டார்’ என்று (மேரு. 874) வாமன முனிவரும், ‘மூவா வமரர’ என்று (சீவக 3036) திருத்தக்க தேவரும் கூறியனவறிக.  துணிவினர் - குறிப்புமுற்றெச்சம்.

305. 
தாதைதன் துறவு முற்றத் தானுடன் பட்ட தல்லால
 
ஓதநீர் வட்டந்தன்னை யொருதுகள் போல வுள்ளத்
 
தாதரம் பண்ணல் செல்லா வபயனு மரசு தன்னைக்
 
காதலன் குமரன்  றம்பி கைப்படுத் தனன்வி டுத்தான்.

 (இ-ள்.) தாதைதன் துறவு முற்றத் தான் உடன்பட்டது அல்லால் - தன் தந்தையின் துறவு நிறை வேறுவதற்காகத் தான் அரசியலை ஏற்க உடன்பட்டதே யன்றி, ஓதம் நீர் வட்டந்தன்னை -  கடல் சூழ்ந்த பூமி முழுவதையும், உள்ளத்து ஒருதுகள்போல ஆதரம் பண்ணல் செல்லா அபயனும் - மனத்தில் ஒரு தூளுக்குச் சம மென்றெண்ணி அதில் பற்றிலனாகிய அபயருசியும், அரசு தன்னை  - அரசியலை,  காதலன் குமரன் தம்பி கைப்படுத்தனன் விடுத்தான் - காதல் மிக்க இளையோனாகிய தம்பியினிடம் ஒப்புவித்துத் தன் பொறையை நீக்கினான்.  (எ-று.)

அயயருசி, தம்பிக்கு  அரசளித்துத் துறவு மேற்கொண்டானென்க.

ஒதம் - குளிர்ச்சி: ஓத நீர் - கடல். கைப்படுத்தல், உலக வழக்கு.  துறவு முந்த என்றும் பாடம்.                                         (86)

306.
மாதவன் மலர்ந்த சொல்லான் மைந்தனும் மங்கை யாய
 
பேதையும் பிணைய னாளும் பிறப்பினி துணர்ந்த பின்னர்



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:35:25(இந்திய நேரம்)