தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

சிறுத்தொண்ட நாயனார்
பல்குமருத் துவாதிபர் செங்காட்டங் குடிவாழ்

படைத்தலைவ, ரமுதளிக்கும் பரஞ்சோதி யார்,

மெய்ச் செல்வமிகு சிறுத்தொண்டர், காழி நாடன்

றிருவருள்சேர்ந் தவர், வளருஞ் சீராளன் றன்னை

நல்குதிரு வெண்காட்டு நங்கைசமைத் திடப்பின்

னன்மதிச்சந் தனத்தாதி தலைக்கறியிட் டுதவப்

புல்கவரும் வயிரவர்தா மகிழ்ந்துமக வருளப்

போற்றியவர் சிவனருளே பொருந்தி னாரே.

41
சேரமான்பெருமாணாயனார்
காவலர்ம கோதையார், கொடுங்கோ ளூர்க்கோக்,

கழறியவை யறிந்தகோச், சிலம்போசைக் கருத்தார்,

நாவலர்கோ னண்ப, “ரடித் சேர“ னென்றே

நவின்றுவரும் வண்ணானை நயந்த கோ,நற்

பாவலர்கோப், பாணபத் திரனால் வாய்ந்த

பரமர்திரு முகம்வாங்கிப் பணிகோ, வெற்பின்

மேவியகோ, வானைக்குக் குதிரை வைத்த

வீரர்கோ, வெனையாளுஞ் சேரர் கோவே.

42
கணநாத நாயனார்
கந்தமலி வயற்காழி மறையோ, ரேத்துங்

கணநாதர் திருத்தோணிக் கடவு ளார்க்கு

நந்தவனம் பலவமைத்து, மலருங் கொய்து,

நற்றாமஞ் சொற்றாம நயந்து சாத்தி,

வந்தவரைத் தொண்டாக்கிப், பணிகள் பூட்டி,

1வாதுசெய்த வாரணத்தை மகிழ்ந்து வாழ்த்திப்,

புந்திமகிழ்ந், தரனருளாற் கயிலை மேவிப்

பொருவில்கணத் தவர்காவல் பொருந்தி னாரே.

43

கூற்றுவ நாயனார்

குன்றாத புகழாளர், களந்தை வேந்தர், கூற்றுவனார், மாற்றலர்மண் கொண்டுசூடப் பொன்றாழு முடிவேண்டப், புலியூர் வாழும் பூசுரர்கள் கொடாதகலப், புனிதனீந்த மன்றாடுந் திருவடியே முடியாச்சூடி, மாநிலங்காத், திறைவனுறை மாடக் கோயிற் சென்றாசையுடன் வணங்கிப்பணிகள் செய்து, திருவருளாலமருலகஞ்சேர்ந்துளாரே

பொய்யடிமையில்லாத புலவர்
பொய்யறியாக் கபிலரொடு பரண ராதிப்

புலவோர்பொற் பார்கலைகள் பொருந்த வோதிச்,

செய்யுளிடை வளராசு மதுர நல்ல

சித்திரம்வித் தாரமெனத் தெரிக்குஞ் செம்மை

மெய்யுடைய தொடைகளெல்லா மன்று ளாடன்

மேவியகோ னிருதாளில் விரவச் சாத்திக்

கையுடையஞ் சலியினரா, யருளான் மேலைக்

கருதரிய வமருலகங் கைக்கொண் டாரே.

45

1 வாதுசெய்த வாரணம் - சமண்வாது வென்ற ஆளுடைய பிள்ளையார்.  

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 16:20:43(இந்திய நேரம்)