தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

வித்தொகையிற் றொண்டர்சீ ருரைத்தான் வைத்த

வீரிரண்டா யிரத்திருநூற் றைம்பத்து மூன்றா

முத்தமநல் விருத்தத்திற், 1பயனாஞ் செய்யு

ளுல கெழுபத் தைந்தெனநின் றுரைக்கு மன்றே.

77

திருத்தொண்டர் புராணசார முற்றிற்று


செல்வமிகு திருத்தொண்டத் தொகையி லுள்ளார்

சிறந்ததனிப் பெயராக வறுபதின்மேன் மூவர்

மல்லன்மிகு கூட்டப்பே ரருள்சேர்ந் தார்கண்

மாதவத்தோர் மும்மூன்று வகைபெற் றார்க

ளில்லறத்துந் துறவறத்து மிருந்து வாழ்ந்தே

யியல்பாகச் சிவபதநான் கிசைந்தார் தம்மை

யல்லலறுத் தெனையாண்ட சைவசிகா மணியா

ரருட்புலியூ ருமாபதியா ரருள்செய் தாரே.

- அபீயுக்தவரக்கு.

78

ஆகத் திருவிருத்தம் - 78


1 பயனாஞ் செய்யுள் உலகெழுபத்தைந்து என்றது - திருத்தொண்டர் புராணப் பயன் என்னும் திருத்தொண்டர் புராணசாரச் செய்யுட்டொகை எழுபத்தைந்து என்று குறித்தபடி என்பர். காப்புச் செய்யுள் நீக்கி எழுபத்தைந்து விருத்தங்களால் இந்நூல் அமைந்திருத்தல் காண்க. இந்நூற்குத் திருத்தொண்டர் புராணப்பயன் என்று ஆசிரியர் பேரிட்டனர் என்பது இதன் காப்புச் செய்யுளில் “திருத்தொண்டர் புராண மேவுந் திருந்துபய னடியேனுஞ் செப்பலுற்றேன்“ என்றதாலும் அறியப்படும். இதில் தொண்டர்சீர் உரைத்தான் என்றது சேக்கிழார் பெருமானை.  

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 16:46:11(இந்திய நேரம்)