Primary tabs
வாய்க்கடைத் தோற்றியவிரு
மருப்பிரண் டென்னவங் கைக்கோ டிரண்டென்னமார்பின்முத் தாரமென்னப்
பாமேவு பேருதா பந்தமென வரைசூழ்படாமெனத் தாளின்முத்தம்
பதித்தகழ லெனவிரவ மேலோங்கு பேருருப்பண்ணவனை யஞ்ச லிப்பாம்
ஏமேவு ஞானசபை யிறைவர்தம் மேனியினிணங்குற வெழுப்புலகெலா
மென்னு மறை யாதியாக் கொண்டவ ருயிர்க்கருளுமியல்பனைத் துந்தெரித்து
நாமேவு மம்முதலோ டொன்றவினை யுருபுதொகநான்கன்டி யாதிசெய்து
நாற்சீரி னானெறி விளக்கியொளிர் சேக்கிழார்நற்றமிழ்க் கவிதழையவே.
மும்மையாப் பகரமாதி
மும்மையுயிர் குறினெடி றனித்துமத சவ்வூர்ந்துமுதலமையு நாமமுற்றார்
செம்மைபெறு மும்மையாம் வருணத் துதித்துச்சிறந்தோங்கு மூர்த்தியார்முற்
செறியுமிகு மும்மையார் செம்பொற் பதரம்புயஞ்சென்னிவைத் தேத்தெடுப்பா