தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

நம்மையருள் சிவபாத விருதய ருளத்துவகை

நண்ணவொண் பொருளாதலா

னாடுமுழ வாரவல மியைதலா லியாவோரு

நாவலர் பிரானென்னலால்

வெம்மைதவிர் புகலியார் முதன்மூவ ரும்புகலும்

வேதத் தமிழ்க்கணுள்ள

மெய்ம்மையை விரித்துத் தெரிந்தருள்செய் குன்றையூர்

வேந்தைப் புரக்கவென்றே.


8
செங்கீரைப் பருவம்
3.
புண்ணிய முதலே! பொங்கொளி மணியே! பொய்யாப்

           பெருவாழ்வே!

பொள்ளலின் முத்தே! கள்ளமில் வித்தே!

        புரையில்

சுவைப்பாகே!
தண்ணிய வமுதே! மண்ணியன் மதியே! தமிழ்நா

      வலரேறே!

சத்துவ நிதியே! பொத்திய மலநோய் சாடு

       பெரும்பகையே!

யெண்ணிய வன்ப ருளத்தமு தூற வினிக்கு

நறுந்தேனே!

யென்றும் பத்தி ரசங்கனி கனியே! யெந்நா

ளினுமெங்கட்

கண்ணிய பொருளே! யாய்பவர் தெருளே! யாடுக

   செங்கீரை

யாரரு ளாகர! சேவையர் காவல வாடுக

செங்கீரை

7
தாலப் பருவம்
4.
சோற மணக்கு மடங்களெலாந்,தூய்மை மணக்குஞ்
          சிந்தையெலாம்,
சுவண மணக்கு மாடையெலாந், தொங்கன் மணக்குந்

         தோள்களெலாஞ்

சேறு மணக்குங் கழனியெலாஞ், செல்வ மணக்கு

      மாடமெலாந்,

தென்றன் மணக்கு மேடையெலாந்,

          தெய்வமணக்குஞ் செய்யுளெலா,

நீறு மணக்கு நெற்றியெலா, நெய்யே மணக்குங்

கறிகளெலா,

நெருப்பு மணக்குங் குண்டமெலா, நேய மணக்கும் வீதியெலாஞ்
சாறு மணக்குங் குன்றத்தூர்த் தலைவா! தாலோ

தாலேலோ

சகலா கமபண் டித!தெய்வச் சைவா! தாலோ

தாலேலோ.

5
சப்பாணிப் பருவம்
5.
நாடிய விரிநூல் சொற்றிடு திறனா னன்னூ லாசிரிய,

னகுபா சுரமுத லுரைசெய் தலினா னவிலுரை

யாசிரியன்

நீடிய பரசமயக்குழி வீழ்ந்தவர் நீப்பப் போதனைசெய்

நிலையாற் போதகாசிரி யன்,னிவை நிகழ்தொறு

நிகழ்தோறும்

ஆடிய ஞானத் திறனுற லான்ஞா னாசிரி யனு,நீயென்

றான்றோர் பலரும் புகழப் படுபவ! வகில

மெலாஞ்சென்று

கூடிய புகழ்சால் குன்றத்தூரன்! கொட்டுக சப்பாணி

கொற்றச் சேவையர் காவல! நாவல! கொட்டுக

சப்பாணி

9
முத்தப் பருவம்
6.
நிலஞ்சார் தெய்வக் கற்பகமே! நிலம ஞானவாரிதியே!

நீடுஞ் சைவப் பெருவாழ்வே! நிலவா நின்ற

குணக்குன்றே!

வலஞ்சார் பெருநா வலரேறே! மாறா வருட்சிந்

தாமணியே!

மதிப்பார் மதியு ளெழுஞ்சுடரே! வாழ்த்து வார்தம்

பெரும்பேறே!

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 15:07:28(இந்திய நேரம்)