Primary tabs
பூரணமே!
புந்திக் கினிக்குஞ் சுவையமுதே! போற்றி யினிமேலொருதாயர்
கலஞ்சார் முலைப்பா லருந்தாத கனிவாய் முத்தந்தருகவே,
கனகக் குன்றை யனக!செழுங் கனிவாய் முத்தந்தருகவே.
நிகழ்கந்த முங்கெடுதலே
நிலவுமின் பென்மருங், குணமூன்று மொழிதலேநிரம்பலுறு மின்பென்மரு,
நாடுமின் பிருவினைக் கேடென்ம ரும்,மலநசித்தலே யின்பென்மரு,
நவில்விக்கி ரகநித்த மின்பென்ம ருந்,தோன்றுஞானமே யின்பென்மரும்,
பாடுமின் புயிர்கெடுத லென்மரும், பகுதிமேற்கெடுதலே யின்பென்மரும்,
படுசித்தி யின்பென்ம ரும், பிறரும் வாதம்படர்ந்துவரு திறனற, வளங்
கூடுசெந் தமிழருமை யறிபெருஞ் சேவையார்குலசிகா மணி!வருகவே
கொன்றைச் சடாடவியர் மன்றைப் பராவியெழுகுன்றைப் பிரான்! வருகவே.
குலைகுலைந் துழல்வை, யெங்கள்
கோமான் பெருங்கல்வி யாட்சியை யுணர்ந்துசெங்குருமணிச் சூட்டுமோட்டு
நிறைவுகெழு துத்திப் பணாடவிப் பாம்பொன்றுநேரடைய மன்றுணாணு;
நினையீன்ற தொருபரவை; யிலகுவே பாரமெனநென்னுனைத் தனையுமெண்ணேன்
முறையினொரு சிறுதூக்கி னெழுபரவை யும்புகமுடித்துற நிறுத்தானிவன்;
மொழியெங்க டம்பிரான் வல்லபமுணர்ந் திலைகொன்?;முத்தமா ளிகைவானயாற்
றறைமணித் திடராய குன்றைநக ராளியுடனம்புலீ! யாடவாவே
யருளுருத் தேசுபொலி யருண்மொழித் தேவனுடனம்புலீ! யாடவாவே