தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

புலஞ்சார் பத்தி விளைநிலமே! போக்கு வருவில்

பூரணமே!

புந்திக் கினிக்குஞ் சுவையமுதே! போற்றி யினிமே

லொருதாயர்

கலஞ்சார் முலைப்பா லருந்தாத கனிவாய் முத்தந்

தருகவே,

கனகக் குன்றை யனக!செழுங் கனிவாய் முத்தந்

தருகவே.

5
வாரானைப் பருவம்
7.
நீடுமின் பரிவையர் புணர்ப்பென்ம ரும்,மைந்து

நிகழ்கந்த முங்கெடுதலே

நிலவுமின் பென்மருங், குணமூன்று மொழிதலே

நிரம்பலுறு மின்பென்மரு,

நாடுமின் பிருவினைக் கேடென்ம ரும்,மல

நசித்தலே யின்பென்மரு,

நவில்விக்கி ரகநித்த மின்பென்ம ருந்,தோன்று

ஞானமே யின்பென்மரும்,

பாடுமின் புயிர்கெடுத லென்மரும், பகுதிமேற்

கெடுதலே யின்பென்மரும்,

படுசித்தி யின்பென்ம ரும், பிறரும் வாதம்

படர்ந்துவரு திறனற, வளங்

கூடுசெந் தமிழருமை யறிபெருஞ் சேவையார்

குலசிகா மணி!வருகவே

கொன்றைச் சடாடவியர் மன்றைப் பராவியெழு

குன்றைப் பிரான்! வருகவே.

8
அம்புலிப் பருவம்
8.
குறையுடைய பாம்பொன் றெடுத்துண் டுமிழ்ந்திடக்

குலைகுலைந் துழல்வை, யெங்கள்

கோமான் பெருங்கல்வி யாட்சியை யுணர்ந்துசெங்

குருமணிச் சூட்டுமோட்டு

நிறைவுகெழு துத்திப் பணாடவிப் பாம்பொன்று

நேரடைய மன்றுணாணு;

நினையீன்ற தொருபரவை; யிலகுவே பாரமென

நென்னுனைத் தனையுமெண்ணேன்

முறையினொரு சிறுதூக்கி னெழுபரவை யும்புக

முடித்துற நிறுத்தானிவன்;

மொழியெங்க டம்பிரான் வல்லபமுணர்ந் திலைகொன்?;

முத்தமா ளிகைவானயாற்

றறைமணித் திடராய குன்றைநக ராளியுட

னம்புலீ! யாடவாவே

யருளுருத் தேசுபொலி யருண்மொழித் தேவனுட

னம்புலீ! யாடவாவே

6
புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 15:14:29(இந்திய நேரம்)