தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

பொருளணிகளுட் சில :-

 I தன்மை :- (அ) பொருட்டன்மை. 1. உல கெலாமுணர்ந்
தோதற்கரியவன்-1. 2. வாரிசொரியும் கதிர்முத்தும் - 492.

(ஆ) தொழிற்றன்மை :- எய்துமென் பெடை யோடு - 304.

ll உவமை :- 1. தொழிலுவமம் - அல்லது வினையுவமம். :-

1. மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற பொங்கியவிருளை யேனைப்
புறவிருள் போக்குகின்ற செங்கதிரவன் போனீக்குந் திருத்தொண்டர்
புராணம் - 10.

2. திரிமுகக்காந்தஞ் சேர்ந்த வல்லிரும் பணையுமாபோல் வள்ளலுங்
கடிது சென்றான் - 196.

3. ஈன்றவான் கனைப்புக் கேட்ட கன்றுபோற் கதறி நம்பி - 214.

4. கதிர்மணி பிறந்த தென்ன வுருத்திர கணிகைமாராம் பதியிலார்
குலத்திற்றோன்றி - 278.

5. மடவார் செய்த சைத்யோபசாரம் அழலின்
நெய்சொரிந்தாலொத்தன - 319.

   2. ஏதுவுவமம் :- இன்ன காரணத்தால் இது இதனை ஒக்கும் என்பது.

1. அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின்........புண்ணியந்
திரண்டுள்ளது போல்வது - 12.

2. வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும், உய்யவே சுரந்தளித்
தூட்டு நீரதாதலின் காவிரி செய்ய பூமகட்குச் செவிலி போல்வது - 53.

3. வரைதரவந்த மேன்மையால், எண்ணில் பேரறங்களும் வளர்க்கு
மீகையால், காவிரி, ஆளுடையநாயகி கருணையின் ஒழுக்கம் போன்றது - 56.

4. மலர் நீரால் வழிபட்டு, எண்ணில் சிவாலயத்து எம்பிரானை
யிறைஞ்சலின் காவிரி, உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்கும் - 57.

5. நீற் றொளியால், நிறை தூய்மையால், அஞ்செழுத் தோசை
பொலிதலால், தேவாசிரியன் ஆயிரம் பாற்கடல் போல்வது - 138.

6. ஆர்த்த வெள்வளைகளாலும், குழைமகரத்தாலும், ஒளிமணிகளாலும்,
பீலிச்கோலை நீணிரத் தரங்கத்தாலும், திருமண வெழுச்சி கடல் கிளர்ந்தது
போன்றது - 168.

7. உயிர்கட்கெல்லாந் தூய்மையும், இன்பமும், தண்மையும் தந்து
போதலின் வெண்ணீற்றின் பேரொளி போன்றது நிலா - 308.

3. உருவுவமம் அல்லது பண்புவமம்:- நிறம் முதலிய
பண்புபற்றிய ஒப்பு.

1. பொன்னின் வெண்டிரு நீறு புனைந்தெனப் பன்னு நீள்பனி
மால்வரைப் பாலது கயிலைத் திருமாமலை - 11.

2. கண்ணிடை கரந்தகதிர் வெண்பட மெனச்சூழ், புண்ணிய
நுதற்றிருநீறு பொலிவெய்த - 175.

3. தண் மதி முதிர்ந்து கதிர் சாய்வதென மீதே, வெண்ணரை
முடித்தது விழுந்திடை சழங்க - 175.

4. மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்பு வைத்துப்,
பொய் தவவேடங் கொண்டு- 473.

4. ஐயவுவமம் :- உவமையும் பொருளுந் துணிவுறாது ஐயப்படக்
கூறுவது. ஐயம் - பலதலையாயவுணர்வு.

1. மானிளம் பிணையோ - 280 - என்ற பாட்டிற்காண்பன ஐயவுவமையின் பாற்படும்.

2. கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ - 286.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 15:23:55(இந்திய நேரம்)