தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


தெய்வமே காப்பு

 

வாருமையா கந்தா
வரங் கொடுமே வேலவரே
தீருமையா இவன் பிணியை
திருச்செந்தூர் வேலவரே

பச்சை நிறம் வள்ளி
பவள நிறம் தெய்வானை
சோதி நிறம் வேலவரு
சொன்ன வரம் தந்தாரே!

புங்கக் கட்டை வெட்டி - திரபதைக்கு
புளியந் தணல் உண்டு பண்ணி;
பூவே றங்கும் நேரமெல்லாம் திரௌபதை
பொன்னிற மாய் வந்தாளே.

யாரடித்தார்?

ஆரடிச்சா நீ யழுத?
அடிச்சாரச் சொல்லியழு
பேரனடிச் சாரோ
பிச்சிப்பூ கைனால?
மாமன் அடிச்சாரோ
மல்லிகைப்பூ கைனால?

மாமன் கைச் சிலம்போ
மச்சி னமார் கைச்சிலம்போ?-நீ
பேரனார் கொண்டைக்கு
வாடா மருக் கொழுந்தோ?



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:01:45(இந்திய நேரம்)