Primary tabs
சேர்ந்த கிளி
நெடு நாட்கழித்து காதலர்கள் மகிழ்ச்சியோடு உரையாடுகிறார்கள்.
சிவ காசிப் பன்னீரு
கட்டி மருக் கொழுந்தே
கம்மாயில கூடினமே
குலத்துக் கொரு ஈனமில்லை
ஊராரு சொல்லையிலே
ஊடுருவிப் பாயுதையா
நான் போவேன் ஒத்தவழி
மின்னிட்டான் பூச்சி போல
முன்னே வந்தா லாகாதோ
கனிவாய நீ திறந்தா
செம்பங் கிளி வாய் திறந்தா
சேர்ந்த கிளி வந்திருமே
சேகரித்தவர்:
S.S.
போத்தையா
இடம்:
விளாத்தி
க்
குளம்
பகுதி,
திருநெல்வேலி மாவட்டம்.