Primary tabs
வந்தா வழி மணக்கும்
வாச லெல்லாம் பூ மணக்கும்
கட்டி அணைஞ்ச கையி
எட்டு நாளும் பூமணக்கும்
மதுரையிலே குதிரை வாங்கி
மல்லிகைப் பூக் குஞ்சம் கட்டி
அடித்து வரும் எம் பெருமான்
ஆத்து மணல் தூள் பறக்க
சிந்துதையா சீனிப் பொடி
சிதறுதையா பூ மலரு
அள்ளுதையா தன்னழகு
ஆளோடி நிற்கும் போது
அஞ்சு வயசிலேயே
அழகு தேமல் விழுந்தவரே
பற்றிப் படருதையா
பச்சைக் கிளி தேகத்துலே
நானும் நடந்திருப்பேன்
நடப்பாரைக் கண்டிருப்பேன்
அந்தச் சாமி நடையைப் போல
சைகையிலே காணலியே
மொச்சிச் செடியே நீங்க
முழக்கமுள்ள தாமரையே
பிச்சி மலர்க் கொடியை
பிரிய மனம் கூடுதில்லை
ஒத்தத் தட்டு வேட்டிகளாம்
உல்லாசத் துண்டுகளாம்
பக்கத்துல நிக்கயிலே
பத்து தையா என் மனசு
பட்டு அரை ஞாண் கொடி
பாவி மகன் வாயருமை
விட்டிட்டி ருந்தாலும்
வேறொருத்தி லாவிருவா