தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1198


ாருண்மை ஆராயுங்கால் ஒருதன்மைய என்றவாறு. 

வரலாறு  :  வாணிகத்தான் ஆயினான் ; வாணிகத்தின் ஆயினான்
என வரும். (9) 

80.  இரண்டன் மருங்கி னோக்க னோக்கமவ்
விரண்டன் மருங்கி னேதுவு மாகும்.
 

இச்     சூத்திரம்    என்னுதலிற்றோ    வெனின்,   இதுவும்   மேற்
சூத்திரத்திற்குரிய முடிவே சார்ந்தது என்றவாறு உணர்த்துதல் நுதலிற்று.

உரை     :   இரண்டாம்   வேற்றுமை,    நோக்கியநோக்கமும்,
நோக்கல்நோக்கமும்  என  இரண்டு  பொருளும் உடைத்து. மேற்றான்,
‘நோக்கலின்’  (வேற்றுமை  -  10)  என்றான்  ; என்புழி, ‘நோக்கலின்’
எனவே அவ்விரண்டு நோக்கமும் அடங்கின. 

நோக்கிய நோக்கம் என்பது பொறியான் நோக்குதல் ; அது, பூணை
நோக்கினான் எனவரும். 

‘நோக்கல் நோக்கம்’ என்பது
‘வானோக்கி வாழும்’
              (குறள். செங்கோ - 2)  

என்பது. இது கண்ணான் நோக்கியது  அன்மையின்  நோக்கல்நோக்கம்
ஆயிற்று.  அப்   பொருண்மைக்கண்ணாயின்   முன்னர்ச்  சொல்லிய
இரண்டு வேற்றுமைப் பொருளும் ஆம் என்றவாறு. 

வரலாறு  : ‘வானோக்கி  வாழும்’ (குறள். செங்கோ-2) என்றக்கால்,
வானை நோக்கி வாழும் என்பது ; இனி, வானானாய உபகாரம் நோக்கி
வாழும் என்பது ; வானினாய உபகாரம் நோக்கி வாழும் என்பதூஉமாம்.
(10) 

90.  அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயி
னதுவென் னுருபுகெடக் குகரம் வருமே.
 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ வெனின், ஆறாவது நான்காவதனொடு
மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. 

உரை   :  மேல்,  ‘இயற்கையி   னுடைமையின்   முறைமையின்’
(வேற்றுமை   -   14)   என,  ஆறாவதனை  முறைமைப்  பொருட்கு
உரித்தென்று     ஓதினான்    ;    அம்    முறைமைப்    பொருள்
உயர்திணைக்காயின் அது என் உருபு கெடக் குகரம் வரும் என்றவாறு. 

வரலாறு :  நம்பிக்கு  மகன்  என வரும். நம்பியது மகன் என்புழி
இழுக்குள்ளது கண்டு, அது காத்தவாறு. (11) 

91. தடுமாறு தொழிற்பெயர்க் கிர
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:20:02(இந்திய நேரம்)