தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1210


பொருளையும் என்பது. பிறவும் அன்ன. (34) 

114.  கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங்
கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே.
 

இச்   சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  இஃது  ஆகுபெயர்க்குப்
புறனடை கூறுதல் நுதலிற்று. 

உரை  : மேற்  சொல்லப்பட்டனவன்றி வரும் ஆகுபெயரும் உள ;
அவற்றையும்   சொல்லப்பட்ட   இலக்கணத்தான்  உணர்ந்து  கொள்க
என்றவாறு. 

அவை வருமாறு  :  யாழ் கேட்டான்  ; குழல் கேட்டான்  என்ப,
அவற்றினாகிய ஓசை கேட்டாரை. 

பசுப் போல்வானைப்  பசு  என்ப  ; பாவை போல்வாளைப் பாவை
என்ப. 

இனி,  எண்ணிற்  கேதுவாகிய  இடங்களையும் ஒன்று, பத்து, நூறு
என்ப. இனி, ‘எழுத்து’ (தொல். எழுத்து. நூன்மரபு - 1) என்பதும் அது.
பிறவும் அன்ன. 

இனிக்,  கிளந்தவல்ல  பிற    என்னாது,   வேறு   என்றதனால்,
ஆகுபெயர்கள் ஈறுதிரியும் என்பது காட்டுக. (35) 

மூன்றாவது வேற்றுமை மயங்கியல் முற்றிற்று.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:22:14(இந்திய நேரம்)