Primary tabs

டுவது என்பது எதிர் காலம். விளையாடிற்
றென்றுமன் ஆகற்பாலது ;
அஃது எதிர்காலமும்
கொண்டது, விளையாடுவது என்று ;
முன்னும்
இறந்தகாலமும் எதிர்காலமும்
நிகழ்காலமும் எல்லாம் மயங்குமாறு
சொல்லிவைத்தார்,
இனி உடன் றொகையாக வுணர்த்தியவாறு. ‘சிறப்பத்
தோன்றும்’ என்பது சாலவுள்ள வழக்கென்பது. (48)
243. ஏனைக் காலமு மயங்குதல் வரையார்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின்,இனி ஒழிந்தகாலமும்
இறப்பினொடு
மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை : ஏனைக்காலமும் என்பது
-- ஒழிந்தகாலமும் என்றவாறு;
மயங்குதல் வரையார் என்பது -- மயங்கிவரு
மரபினை வரையார்
இவ்விறப்புக் காலத்தோடு என்றவாறு.
வரலாறு : யாம் பண்டு
விளையாடுங்கா ; பண்டு என்பது இறந்த
காலம், விளையாடும் என்பது செய்யும் என்னும் நிகழ்காலச்சொல் வந்து
முடிந்தது. ‘வரையார்’ என்பது மற்றாசிரியர்
என்றவாறு. மூன்று காலமும்
மயங்கும் தம்முள் என்பதுநேர்ந்தானாம்
ஆசிரியன். அஃதேயெனின்,
மூன்று காலமும் அல்லது காலமில்லை ; அவை மூன்றும்
தம்முண்
மயங்குமென்றக்கால், வழூஉவென்ற தில்லையாம்
பிறவெனின், அற்றன்று,
எவ்வாறானும் மயங்கா மூன்று காலமும்,
மேற்காட்டின உதாரண
முடிபுபோல்வன படுவழி வழக்கிற்கு ஏற்றவாறு
மயங்கும், அன்ன
வழக்கு உள்வழி என்பது. (49)
ஆறாவது வினையியல் முற்றிற்று.