தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1268


ம்     சுட்டிற்றாகலான், கொணர்ந்ததனை ஒழிக்குஞ் சுட்டுநிலை
அதனை  யொழித்து  ஒழிந்ததென்று  அவ்வினத்தல்லது  பிறிதொன்று
குறித்தது  கொல்லோ எனிற் குறியா; மற்று அப் பொத்தகத்துள் ஒன்றே
பின்னுங் குறித்தது எனப்படும். (16) 

260. மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும்.
 

வரலாறு:

‘கார்மன்ற என்பவள் கண்ணுள்ளே காதலர்
தேர்மன்றத் தோன்றிய’ 

என்றக்கால், தெளிந்தாள் அவள் என்றவாறு. (17)  

261. தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே. 

வரலாறு:

‘ஏனோரோ தஞ்சம் இருபிறப்பி னோர்க்கும்
வாழ்தல் அரிது’ (18)
 

262. அந்தி லாங்க வசைநிலைக் கிளவியென்
றாயிரண் டாகு மியற்கைய வென்ப. 

இதுவும்  தத்தங்    குறிப்பிற்    பொருள்    செய்குவனவற்றையும்
அசைநிலையையும் உணர்த்துதல் நுதலிற்று.

வரலாறு:

இடஞ்சுட்டி வந்தது:

‘வருமேசேயிழையந்திற், கொழுநற் காணிய’ [குறுந்-293]

என வரும்.

அசைநிலை:

‘அந்தில் கச்சினன் கழலினன்’ [அகம் - 76]

என வரும். (19) 

263. கொல்லே யையம். 

வரலாறு: 

இது, ‘குற்றி கொல்லோ, மகன் கொல்லோ, நாய்  கொல்லோ,  நரி
கொல்லோ’ என வரும். (20) 

264. எல்லே விளக்கம். 

வரலாறு:

இது, 

‘எல்வளை’ [புறம் - 24]

என வரும். (21) 

265. இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி
பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே. 

உரை: இது,
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:32:56(இந்திய நேரம்)