தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1269


ஆர் என்னும் இடைச்சொல் பெயர்முன் அல்லது வாரா என்பது. 

வரலாறு:  

‘அரசனார் வந்தார்; பார்ப்பார் வந்தார்’ எனவரும். 

இனி விலங்கின்மேலும், ‘யானையார் வந்தார்; நாயார் வந்தார்’ என
வரும். 

‘பெயர்முன்     ஆரைக் கிளவி பலர்க்குரி எழுத்தின் வினையொடு
முடித்தல்  இயல்பல’  என  எல்லாப்  பெயரும்  அடங்க மொழிமாற்றி
உரைக்க.
                                                      (22) 

266. அசைநிலைக் கிளவி யாகுவழி யறிதல். 

வரலாறு: 

இது, ‘செல்ல மன்னார் நெடுந்தகை’ எனவரும். (23)  

267. ஏவுங் குரையு மிசைநிறை யசைநிலை
யாயிரண் டாகு மியற்கைய வென்ப. 

உரை:  ஏ - இசைநிறை; குரை - அசைநிலை என நிரனிறையாகக்
கொள்க. 

வரலாறு: 

‘ஏஏ வம்பல் மொழிந்தனம் யாமே’ 

 ஏ - இசைநிறை யாயினவாறு. 

‘பல்குரைத் துன்பங்கள் சென்று படும்’ [குறள். நல்குரவு-5] 

எனக் குரை அசைநிலை. (24) 

268. மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல். 

வரலாறு: 

இது,

‘மாயக் கடவுட் குயர்கமா வலனே’

உயர்க    என்னும்    வியங்கோட்கண்    மா    என்னுஞ்    சொல்
அசைநிலையாய் வந்தது. (25) 

269. மியாயிக மோமதி யிகுஞ்சின் னென்னு
மாவயி னாறு முன்னிலை யசைச்சொல். 

உரை:   முன்னிலைக்கண்  அசைச்  சொல்லாய்  வருவன   இவை
என்றவாறு. 

வரலாறு:

மியா : ‘கேண்மியா.’ 

இக  : ‘தண்டுரை யூரயாங் கண்டிக’ 

மோ : ‘காமஞ் செப்பாது கண்டது மொழீமோ’ [குநுந்-2] 

மதி : ‘சென்மதி பெரும’ 

இகும்: ‘மெல்லம் புலம்ப கண்டிகும் யாமே’ 

சின்: ‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகல்’ [அகம்-7]
                                                      (26) 

270. அவற்றுள்
இகுமுஞ் சின்னு மேனை யிடத்தொடுந்
தகுநிலை யுடைய வென்மனார் புலவர். 

வரலாறு:

இகும், தன்மைக்கண் வருமாறு:
         ‘கண்டிகு மல்லமோ கொண்க’ [ஐங்குறு-121]

என வரும். 

படர்க்கை: ‘புகழ்ந்திகு மல்லளோ பெரிதே’

என வரும். 

சின்,
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:33:07(இந்திய நேரம்)