Primary tabs

த்தனளாயினும் என்பதாம். (8)
300. பயப்பே பயனாம்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இவை யெல்லாங் குறிப்பு.
வரலாறு:
‘ஆண்பயமுந் தூக்கினென்’
என்புழிப், பயன் கூறியவாறு. (9)
301. பசப்பு நிறனாகும்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது பண்புபற்றி வந்தது.
வரலாறு :
‘பசப்பித்துச் சென்றார்’
என்புழி, நிறம் கூறியவாறு. (10)
302. இயைபே புணர்ச்சி..
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவுங் குறிப்பு.
வரலாறு :
‘இயைந்தொழுகும்’
என்றக்கால், பொருந்தி யொழுகும் என்பதாம். (11)
303. இசைப்பிசை யாகும்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இஃது இசைபற்றி வந்தது.
வரலாறு :
‘இசைந்தொழுகும்’
என்றக்கால், இசையத் தோன்றிவிடும் என்பதாம். (12)
304. அலமர றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவுங் குறிப்பு.
வரலாறு :
‘அலமரலாயம்’ (ஐங்குறு - 64)
என்றக்கால், சுழன்றுவரல் ஆயம் என்பதாம்.
‘தெருமரலுள்ளம்’
என்பது, சுழன்று வரும் உள்ளம் என்பதாம். (13)
305. மழவுங் குழவு மிளமைப் பொருள.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவுங் குறிப்பு.
வரலாறு :
‘குழக்கன்று கடிதியாத்தாள்’
என்றக்கால், இளங்கன்று கடிதியாத்தாள் என்றதாம்.
‘மழகளிறு’ (புறம்-38)
என்றக்கால், இளங்களிறு என்றவாறாம். (14)
306. சீர்த்தி மிகுபுகழ்.
வரலாறு:
‘வயக்கஞ்சால் சீர்த்தி’
என்றக்கால், மிக்கபுகழ் என்பதாம். (15)
307. மாலை யியல்பே.
வரலாறு:
‘இரவரன் மாலையன்’ (குறிஞ்சிப்பாட்டு - 239)
என்றவழி, இரவின் வரும் இயல்பினன்