Primary tabs

குறிப்புப்பற்றித் தோன்றும் உரிச்சொற்கள் பலவாகலான் அவற்றுப்
பகுதி முற்கூறிய தொடங்கினார்.
உரை :
இக்கூறப்பட்ட மூன்று உரிச்
சொல்லும் மிகுதிப்
பொருண்மையை விளக்கும் என்றவாறு.
வரலாறு :
‘உறுகா லொற்ற வொல்கி’ (நற்றிணை - 300)
என்பது, மிகுகாலொற்ற வொல்கி என்பதாம்.
‘தவச்செய் நாட்டா ராயினும்’ (நற்றினை - 115)
என்பது, மிகச்சேய நாட்டார் என்பதாம்.
‘நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர்’
என்பது, மிகச்சேய்த் தன்றவன் பழவிறன் மூதூர் என்பதாம். (3)
295. உருவுட் காகும் புரையுயர் பாகும்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் குறிப்பு.
வரலாறு :
‘உருவக் குதிரை’ (அகம் - 1)
என்றக்கால், உட்கத்தக்க குதிரை என்பதாம்.
‘புரைய மன்ற புரையோர் கேண்மை’ (நற்றிணை - 1)
என்பது, உயர்ந்துயர்ந்தோர் கேண்மை என்பதாம். (4)
296. குருவுங் கெழுவும் நிறனா கும்மே.
வரலாறு :
‘குருத்துளி பொழிந்தது’
‘கேழ்கிள ரகலத்து’ (மதுரைக்காஞ்சி - 493)
என்றக்கால், அவையிரண்டினும் நிறம் சொன்னவாறு. (5)
297. செல்ல லின்ன லின்னா மையே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் குறிப்பு.
உரை :
இவை இரண்டும் நோய்ப் பொருண்மைய ஆகும்
என்றவாறு.
வரலாறு :
‘மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (அகம்-22)
என்புழி, நோய் என்பதாம்;
வெயில்புறந் தரூஉ மின்ன லியக்கம்’ (மலைபடுகடாம்-374)
என்றவிடத்தும் அதுவாம். (6)
298. மல்லல் வளனே யேபெற் றாகும்.
வரலாறு:
‘மல்லன் மாமலை’
என்றக்கால், வளனுடைய மாமலை என்பதாம்.
‘ஏகலடுக்கம்’ (அகம்-52)
என்றக்கால், பெற்றிய கல்லடுக்கம் என்பதாம். (7)
299. உகப்பே யுயர்த லுவப்பே யுவகை.
வரலாறு:
‘நாடுகாண மேன்மே லுகமின்’
என்பது, நாடுகாணிக் கன்மே லேறினான் மேன்மேல் உயர்மின்
என்பதாம்.
‘உவக்குந ளாயினும் ஊடின ளாயினும்’ (அகம்-203)
என்புழி, உவ