Primary tabs

ல், வளஞ் செந்நெல் என்பதாம். வளம் என்பது ஆக்கம்.
‘செழுந்தடி தின்ற செந்நா யேற்றை’
என்பது, கொழுந் தடி தின்ற என்பதாம்; கொழுப்பு என்பது
ஊன்பற்றிய நிணம். (55)
347. விழுமஞ் சீர்மையு மிடும்பையுஞ் செய்யும்.
வரலாறு :
‘விழுமியர்’
என்றக்கால், சீரியர் என்பதாம்.
‘விழுமமுற் றிருந்தார்’
என்றக்கால், இடும்பையுற் றிருந்தார் என்பதாம். (56)
348. கருவி தொகுதி.
வரலாறு:
‘கருவி வானம் கதழுறை சிதறி’ (அகம் - 4)
என்றக்கால், ஈண்டு, மின்னும் முழக்கும் காற்றும் என
இத்தொடக்கத்தன வாயிற்று. (57)
349. கமநிறைந் தியலும்.
வரலாறு:
‘கமஞ்சூன் மாமழை’ (திருமுருகு-7)
என்றக்கால், நிறைந்த சூன் மாமழை என்பதாம். (58)
350. அரியே யைம்மை.
வரலாறு :
‘அரிமயிர்த் திரண்முன்கை’
என்றக்கால், ஐம்மயிர்த் திரண் முன்கை என்றவாறாம். ()
351. கவவகத் திடுமே.
இவை யெல்லாங் குறிப்பு.
வரலாறு :
‘கொடும்பூண் கவைஇய கோல மார்பு’
என்றக்கால், கொடும் பூண் அகத்திட்ட கோல மார்பு என்பதாம். (60)
352.
துவைத்தலுஞ் சிலைத்தலு மியம்பலு
மிரங்கலு
மிசைப் பொருட் கிளவி யென்மனார் புலவர்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இவை நான்கும் இசைபற்றி
வந்தன.
வரலாறு :
‘வரிவளை துவைப்ப’ (புறம்-158)
என்றக்கால், சங்கு இசைப்ப என்பதாம்.
‘கலையினிரலை சிலைப்ப’
என்றக்கால் அதனது குரலிசைப்பைச் சொல்லிற்றாம்;
‘ஏறு சிலைக்கும்’
என்பதும் அது.
‘இயமர மியம்பும்’
எனவே, ஒலிக்கும் என்பதாம்.
‘முரசிரங்கு முற்றம்’
என்றக்கால், இசைக்கும் என்பதாம். (53)
353.
அவற்றுள்
இரங்கல் கழிந்த பொருட்டு மாகும்.