Primary tabs

உடைய நான்கு சொல்லும், ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே-
ஒருவன், ஒருத்தி என்னும் உயர்திணை ஒருமைப் பாலிடத்துப்
படர்க்கையை உணர்த்துஞ் சொல்லாம், எ-று.
அள்ளும் அம் ஈற்றோடும், ஆனும் ஆளும் ஆம் ஈற்றோடும் ஒக்கும்.
(எ-டு.) உண்டனன், உண்டிலன்; உண்ணாநின்றனன், உண்கின்றனன்,
உண்ணாநின்றிலன்,
உண்கின்றிலன்; உண்பன், உண்குவன், உண்ணலன்
எனவும், உண்டான்,
உண்டிலான்; உண்ணாநின்றான், உண்கின்றான்,
உண்ணாநின்றிலான், உண்கின்றிலான்;
உண்பான், உண்குவான்,
உண்ணான் எனவும், உண்டனள், உண்டிலள்;
உண்ணாநின்றனள்,
உண்கின்றனள், உண்ணாநின்றிலள், உண்கின்றிலள்;
உண்பள்,
உண்குவள், உண்ணலள் எனவும், உண்டாள், உண்டிலாள்;
உண்ணாநின்றாள்,
உண்கின்றாள். உண்ணாநின்றிலாள், உண்கின்றிலாள்;
உண்பாள், உண்குவாள்,
உண்ணாள் எனவும் வரும், உண்டனனல்லன்,
உண்டானல்லன்; உண்டனளல்லள்,
உண்டாளல்லள் எனப் பிற
வாய்ப்பாட்டான்வரும் மறையும் அறிக. (8)
படர்க்கைப் பன்மை வினைமுற்று
208.
(இ-ள்.)ஈற்று எழுத்தினை உடையவாய் வரும் மூன்று சொல்லும், பல்லோர்
மருங்கிற் படர்க்கைச் சொல்லே - பல்லோரிடத்துப் படர்க்கைப்
பன்மையை உணர்த்துஞ் சொல்லாம்

