தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   656


கரம் பெற்றும் பெறாதும், ஏற்றவழி உகரம் பெற்றும் வரும். 

(எ-டு.) உண்குவ,   தின்குவ   எனவும்,  ஓடுவ,  தாவுவ  எனவும்,
உரிஞுவ,  செருமுவ  எனவும் வரும். உண்டனவல்ல,  உண்டனவில்லை
எனப் பிற வாய்ப்பாட்டு மறையும் அறிக. (19) 

அஃறிணை ஒருமைத் தெரிநிலை வினைமுற்று

219. ஒன்றன் படர்க்கை த ற ட ஊர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும். 

இஃது, ஒருமைவினை கூறுகின்றது. 

(இ-ள்.)   ஒன்றன்  படர்க்கை - ஒன்றனை உணர்த்தும் படர்க்கை
வினையாவது,  த ற ட ஊர்ந்த குன்றியலுகரத்து இறுதி ஆகும் - த ற,
ட   என்னும்   ஒற்றுக்களை  ஊர்ந்து  நின்ற  குன்றிய  லுகரத்தினை
ஈறாகவுடைய சொல்லாம், எ-று. 

தகர  உகரம்   இறந்தகாலத்து  வருங்கால் ‘க, ட, த, ற’க்கள் முன்
அகரம்  பெற்றும், ஏனை எழுத்தின்முன் இகரமும் யகர உயிர்மெய்யும்
பெற்றும், யகர உயிர்மெய்யே பெற்றும் வரும். 

(எ-டு.)  புக்கது, புக்கிலது; உண்டது, உண்டிலது; வந்தது, வந்திலது;
சென்றது, சென்றிலது எனவும், எஞ்சியது, தப்பியது எனவும்  உரிஞியது,
நண்ணியது,  பொருநியது,  செருமியது,  துன்னியது  எனவும், போயது,
கூறியது, சொல்லியது, மேவியது, துள்ளியது எனவும் வரும். 

இனி, நில்,  கின்று  என்பனற்றொடு  நிகழ்காலத்தின்கண்  அகரம்
பெற்று வரும். 

(எ-டு.) நடவாநின்றது, நடவாநின்றிலது; நடக்கின்றது, நடக்கின்றிலது,
உண்ணாநின்றது,  உண்ணாநின்றிலது; உண்கின்றது, உண்கின்றிலது என
வரும். 

இனி, எதிர்காலத்தின்கண்  உயிர்மெய்யான  பகர  வகரம்  பெற்று,
உண்பது, செல்வது என வரும். 

றகர  உகரம், ‘க, ட, த, ற’ என்பனவற்றின்முன் அன்னும் இன்னும்
பெற்றும், ஏனை எழுத்தின்முன் ‘இன்’ பெற்றும், அவ்வின்னின் னகரம்
தி
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:47:23(இந்திய நேரம்)