Primary tabs

திங்கள்
பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி
வருகுவை யாயின் தருகுவென் பாலென
விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித்
திதலை யல்குலெங் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.’’
(அகம். 54)
இது பாகற்குரைத்தது. இது முல்லைக்கட் காரும் மாலையும் வந்தது.
‘‘மன்றுபா டவிந்து மனைமடிந் தன்றே
கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே
யாமங் கொளவரிற் கனைஇக் காமங்
கடலினு முரைஇக் கரைபொழி யும்மே
யெவன்கொல் வாழி தோழி மயங்கி
இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக்
கிறும்புபட் டிருளிய இட்ட ருஞ்சிலம்பிற்
குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்
கானக நாடன் வரூஉம் யானைக்
கயிற்றுபுறத தன்ன கன்மிசைச் சிறுநெறி
மாரிவானந் தலைஇ நீர்வார்பு
இட்டருங் கண்ண படுகுழி யியவின்
இருளிடை மிதிப்புழி நோக்கியவர்
தளரடி தாங்கிய சென்ற தின்றே.’’
(அகம்.128)
இரவுக்குறிக்கட் சிறைப்புறமாகத்
தோழிக்கு உரைப்பாளாக
உரைத்தது. இது குறிஞ்சிக்குக் கூதிரும் யாமமும் வந்தது.
நிலனும்
பொழுதும் முதலென்றமையிற் கார் முதலாதல் வேண்டும்;
வேண்டவே, அதற்கிடையின்றிக் கூறிய மாலையும் அதன்
சினையாமாதலிற், கார்காலத்து மாலையென்பது பெற்றாம். இது
கூதிர்யாமம் என்பதற்கும் ஒக்கும். (6)
குறிஞ்சிக்கு முன்பனியு முரித்தெனல்
இஃது
எய்தியதன்மேற் சிறப்புவிதி; முற்கூறிய குறிஞ்சிக்கு
முன்பனியும் உரித்தென்றலின்.
(இ-ள்) பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப - பனி
முற்பட்ட பருவமுங் குறிஞ்சிக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் எ-று.
எதிர்தலென்பது முன்னாதல்; எனவே, முன்பனியாயிற்று, அது
ஞாயிறுபட்ட அந்திக்கண் வருதலின். உரித்தென்றதனாற் கூதிர் பெற்ற
யாமமும் முன்பனி பெற்று வரும் எனக் கொள்க.
உ-ம்:
பனியடூஉ நின்ற பானாட் கங்குல்
தமியோர் மதுகை தூக்காய் தண்ணென
முனிய அலைத்தி முரணில் காலை
(அகம்.125)
என முன்பனியாமங் குறிஞ்சிக்கண் வந்தது.
மருதத்திற்குரிய சிறுபொழுதும் நெய்தற்குரிய சிறுபொழுதும்
நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்.
இனிச் சிறுபொழுதே பெறுவன கூறுகின்றது.
(இ-ள்)
வைகுறு விடியல் மருதம் - வைகறையும் விடியற் காலமும்
மருதமாதலும்;