தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   249


    குரியவும் அரசர்க்கு
    ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே

    618 பரிசில், பாடாண் திணைத் துறைக் கிழமைப்பெயர்,
    நெடுந்தகை, செம்மல், என்று இவை பிறவும்,
    பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே.
    அந்த ணாளர்க்கு அரசு வரைவு இன்றே.

    619 ஊரும், பெயரும், உடைத்தொழிற் கருவியும்,
    யாரும் சார்த்தி அவை அவை பெறுமே.

    620 'தலைமைக் குணச் சொல்லும் தத்தமக்கு உரிய
    நிலைமைக்கு ஏற்ப நிகழ்த்துப' என்ப

    621 'இடை இருவகையோர் அல்லது, நாடின்,
    படை வகை பெறாஅர்' என்மனார் புலவர்.

    622 வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை

    623 மெய் தெரி வகையின் எண் வகை உணவின்
    செய்தியும் வரையார், அப் பாலான.

    624 கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே

    625 'வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது,
    இல்' என மொழிப 'பிறவகை நிகழ்ச்சி'.

    626 'வேந்தி விடு தொழிலின் படையும் கண்ணியும்
    வாய்ந்தனர்' என்ப'அவர் பெறும் பொருளே'

    628 வில்லும், வேலும், கழலும், கண்ணியும்,
    தாரும், மாலையும், தேரும், வாளும்,
    மன் பெறு மரபின் ஏனோர்க்கு உரிய.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:38:39(இந்திய நேரம்)