ருந்தவன் உரைப்பத்
தூங்குஎயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கிமுன் நின்று
மண்ணகத்து என்தன் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த
நால்ஏழ் நாளினும் நன்குஇனிது உறைகென
அமரர் தலைவன் ஆங்குஅது நேர்ந்தது
கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்
மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடுஎனும்
இத்திறம் தத்தம் இயல்பினில் காட்டும்
சமயக் கணக்கரும் தம்துறை போகிய
அமயக் கணக்கரும் அகலார் ஆகிக்
கரந்துஉரு எய்திய கடவு ளாளரும்
பரந்துஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்
வந்துஒருங்கு குழீஇ வான்பதி தன்னுள்
கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்
மடி