தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Soolamani Malai

  • ஓலை எண் : 

  • சூளாமணி மாலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   8

    29.
    கண்ணி லாங்கழை யின்கதிர்க் கற்றையு
    மண்ணி லாங்குரல் வார்தினை வாரியும்
    எண்ணி லாங்கவி ளைவன வீட்டமும்
    உண்ணி லாங்குல வாமை யுயர்ந்தவே.
     
    30.
    பேழ்த்த காயின பேரெட் பிறங்கிணர்
    தாழ்த்த காயின தண்ண வரைக்கொடி
    சூழ்த்த காய்த்துவ ரைவர கென்றிவை
    மூழ்த்த போன்றுள முல்லை நிலங்களே.
     
    31.
    மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும்
    பூடு கொண்ட பொதும்பரொ டுள்விராய்த்
    தோடு கொண்டபைங் காய்துவள் செந்நெலின்
    காடு கொண்டுள கண்ணக னாடெலாம்.
     
    32.
    சங்கு நித்தில முந்த வழிப்பியும்
    தெங்கந் தீங்குலை யூறிய தேறலும்
    வங்க வாரியும் வாரலை வாரியும்
    தங்கு வாரிய தண்கட னாடெலாம்.
     
    33.
    கொடிச்சியர் புனத்தயற் குறிஞ்சி நெய்பகர்
    இடைச்சியர் கதுப்பயற் கமழு மேழையங்
    கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த்
    தொடுத்தலர் பிணையலார் குழலுட் டோன்றுமே.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 23:50:46(இந்திய நேரம்)