3. காப்பிய இலக்கியம்

சிலப்பதிகாரம்

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  சோழ நாட்டின் தலைநகர் வஞ்சியாகும்.

தவறு

2.  கோவலன் கண்ணகி திருமணச் சடங்குகளைச் செய்வித்தவன் மாமுது பார்ப்பான் ஆவான்.

சரி

3.  முருடு என்பது ஓர் இசைக் கருவியாகும்.

சரி

4.  அருந்ததி போன்ற கற்பினள் கண்ணகி ஆவாள்.

சரி

5.  கோவலன் - கண்ணகி திருமணம் நடந்த இடம் மதுரையாகும்.

தவறு

6.  கோவலன் ஓர் அரசன் ஆவான்.

தவறு

7.  சூளாமணி சிறுகாப்பியம் ஆகும்.

சரி

8.  ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று நாககுமார காவியம்.

தவறு

9.  சேரநாட்டின் தலைநகரம் மதுரை ஆகும்.

தவறு

10.  சிலப்பதிகாரத்தின் முதல் பகுதி மங்கல வாழ்த்துப் பாடல் ஆகும்.

சரி