முகப்பு |
பசு (ஆ, ஆன், கறவை, செருத்தல்) |
27. பாலை |
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது, |
||
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு, |
||
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது, |
||
பசலை உணீஇயர் வேண்டும்- |
||
திதலை அல்குல் என் மாமைக் கவினே. |
உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெள்ளி வீதியார் |
64. முல்லை |
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென, |
||
புன் தலை மன்றம் நோக்கி, மாலை |
||
மடக் கண் குழவி அலம்வந்தன்ன |
||
நோயேம் ஆகுதல் அறிந்தும், |
||
சேயர்-தோழி!-சேய் நாட்டோரே. |
உரை | |
பிரிவிடை ஆற்றாமை கண்டு, 'வருவர்' எனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கருவூர்க் கதப்பிள்ளை |
80. மருதம் |
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி, |
||
பெரும் புனல் வந்த இருந் துறை விரும்பி, |
||
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது |
||
அஞ்சுவது உடையளாயின், வெம் போர் |
||
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி |
||
முனை ஆன் பெரு நிரை போல, |
||
கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே. |
உரை | |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - ஒளவையார் |
104. பாலை |
அம்ம வாழி, தோழி! காதலர், |
||
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப, |
||
தாளித் தண் பவர் நாள் ஆ மேயும் |
||
பனி படு நாளே, பிரிந்தனர்; |
||
பிரியும் நாளும் பல ஆகுபவே! |
உரை | |
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது; 'சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ?' என்ற தோழிக்குக் கிழத்தி கூறியதூஉம் ஆம். - காவன்முல்லைப் பூதனார். |
108. முல்லை |
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக் |
||
கறவை கன்றுவயின் படர, புறவில் |
||
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச் |
||
செவ் வான் செவ்வி கொண்டன்று; |
||
உய்யேன் போல்வல்-தோழி!-யானே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது. - வாயிலான் தேவன் |
132. குறிஞ்சி |
கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்; |
||
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே- |
||
யாங்கு மறந்து அமைகோ, யானே?- ஞாங்கர்க் |
||
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி |
||
தாய் காண் விருப்பின் அன்ன, |
||
சாஅய் நோக்கினள்-மாஅயோளே, |
உரை | |
கழற்றெதிர்மறை. - சிறைக்குடி ஆந்தையார் |
162. முல்லை |
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப் |
||
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை- |
||
முல்லை! வாழியோ, முல்லை!-நீ நின் |
||
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை; |
||
நகுவை போலக் காட்டல் |
||
தகுமோ, மற்று-இது தமியோர்மாட்டே? |
உரை | |
வினை முற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பானாய் உரைத்தது.- கருவூர்ப் பவுத்திரன். |
190. முல்லை |
நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி, |
||
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர் |
||
அறிவர்கொல் வாழி-தோழி!-பொறி வரி |
||
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய |
||
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள், |
||
நல் ஏறு இயங்குதொறு இயம்பும் |
||
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே? |
உரை | |
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பூதம்புல்லன். |
204. குறிஞ்சி |
'காமம் காமம்' என்ப; காமம் |
||
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின், |
||
முதைச் சுவற் கலித்த முற்றா இளம் புல் |
||
மூதா தைவந்தாங்கு, |
||
விருந்தே காமம்-பெரும்தோளோயே! |
உரை | |
தலைமகற்குப் பாங்கன் உரைத்தது. - மிளைப் பெருங் கந்தன் |
210. முல்லை |
திண் தேர் நள்ளி கானத்து அண்டர் |
||
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி |
||
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ் சோறு |
||
எழு கலத்து ஏந்தினும் சிறிது-என் தோழி |
||
பெருந் தோள் நெகிழ்த்த செல்லற்கு |
||
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே. |
உரை | |
பிரிந்து வந்த தலைமகன், 'நன்கு ஆற்றுவித்தாய்!' என்றாற்குத் தோழி உரைத்தது - காக்கை பாடினியார் நச்செள்ளையார். |
224. பாலை |
கவலை யாத்த அவல நீள் இடைச் |
||
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா |
||
நோயினும் நோய் ஆகின்றே-கூவற் |
||
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட |
||
உயர்திணை ஊமன் போலத் |
||
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே. |
உரை | |
பிரிவிடை 'இறந்துபடும்' எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.- கூவன் மைந்தன் |
260. பாலை |
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும் |
||
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே; |
||
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்; |
||
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார் |
||
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை |
||
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து, |
||
கன்று இல் ஓர் ஆ விலங்கிய |
||
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே. |
உரை | |
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார். |
275. முல்லை |
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக் |
||
கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!- |
||
எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப் |
||
புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ? |
||
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு |
||
வல் வில் இளையர் பக்கம் போற்ற, |
||
ஈர் மணற் காட்டாறு வரூஉம் |
||
தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே. |
உரை | |
பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி |
295. நெய்தல் |
உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும், |
||
தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி, |
||
விழவொடு வருதி, நீயே; இஃதோ |
||
ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை |
||
பெரு நலக் குறுமகள் வந்தென, |
||
இனி விழவு ஆயிற்று என்னும், இவ் ஊரே. |
உரை | |
வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது. - தூங்கலோரி |
344. முல்லை |
நோற்றோர் மன்ற-தோழி!-தண்ணெனத் |
||
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள் |
||
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு |
||
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல் |
||
பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து, |
||
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை, |
||
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப் |
||
பிரிந்து உறை காதலர் வர, காண்போரே. |
உரை | |
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் கூறியது. - குறுங்குடி மருதன் |
358. மருதம் |
வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே |
||
எறிகண் பேதுறல்; 'ஆய்கோடு இட்டுச் |
||
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க |
||
வருவேம்' என்ற பருவம் உதுக்காண்: |
||
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப் |
||
பல் ஆன் கோவலர் கண்ணிச் |
||
சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே. |
உரை | |
தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - கொற்றன் |