|
13 ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை |
|
|
||
|
[ மணிமேகலைக்கு அறவணர் ஆபுத்திரன் திறம் கூறிய பாட்டு ] |
|
|
|
|
|
||
|
மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய |
|
|
ஆபுத் திரன்திறம் அணியிழை கேளாய்: |
|
|
வார ணாசிஓர் மறைஓம் பாளன் |
|
|
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் |
|
5
|
பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து |
|
|
||
|
கொண்டோன் பிழைத்த தண்டம் அஞ்சித் |
|
|
தென்திசைக் குமரி ஆடிய வருவோள் |
|
|
சூல்முதிர் பருவத்துத் துஞ்சுஇருள் இயவிடை |
|
|
ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகித் |
|
10
|
தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க, |
உரை |
|
||
|
தாய்இல் தூவாக் குழவித்துயர் கேட்டுஓர் |
|
|
ஆவந்து அணைந்துஆங்கு அதன்துயர் தீர |
|
|
நாவால் நக்கி நன்பால் ஊட்டிப் |
|
|
போகாது எழுநாள் புறம்காத்து ஓம்ப, |
உரை |
15
|
வயனங் கோட்டில்ஓர் மறைஓம் பாளன் |
|
|
||
|
இயவிடை வருவோன் இளம்பூதி என்போன் |
|
|
குழவி ஏங்கிய கூக்குரல் கேட்டுக் |
|
|
கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்துஆங்கு |
|
|
ஆமகன் அல்லன் என்மகன் என்றே |
|
20
|
காதலி தன்னொடு கைதொழுது எடுத்து |
உரை |
|
||
|
நம்பி பிறந்தான் பொலிகநம் கிளைஎனத் |
|
|
தம்பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி |
|
|
மார்புஇடை முந்நூல் வளையா முன்னர் |
|
|
நாஇடை நன்னூல் நன்கனம் நவிற்றி |
|
25
|
ஓத்துஉடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் |
|
|
||
|
நாத்தொலைவு இன்றி நன்கனம் அறிந்தபின், |
உரை |
|
அப்பதி தன்னுள்ஓர் அந்தணன் மனைவயின் |
|
|
புக்கோன் ஆங்குப் புலைசூழ் வேள்வியில் |
|
|
குரூஉத்தொடை மாலை கோட்டிடைச் சுற்றி |
|
30
|
வெரூஉப்பகை அஞ்சி வெய்துயிர்த்துப் புலம்பிக் |
|
|
||
|
கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி |
|
|
வலையிடைப் பட்ட மானே போன்றுஆங்கு |
|
|
அஞ்சிநின்று அழைக்கும் ஆத்துயர் கண்டு |
|
|
நெஞ்சுநடுக்கு உற்று நெடுங்கணீர் உகுத்துக் |
உரை |
35
|
கள்ள வினையில் கடுந்துயர் பாழ்பட |
|
|
||
|
நள்இருள் கொண்டு நடக்குவன் என்னும் |
|
|
உள்ளம் கரந்துஆங்கு ஒருபுடை ஒதுங்கி |
|
|
அல்இடை ஆக்கொண்டு அப்பதி அகன்றோன் |
|
|
கல்அதர் அத்தங் கடவா நின்றுழி |
உரை |
40
|
||
|
||
|
கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி |
|
|
ஆகொண்டு இந்த ஆர்இடைக் கழிய |
|
|
நீமகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் |
|
|
புலைச்சிறு மகனே போக்கப் படுதிஎன்று |
|
45
|
அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப, |
உரை |
|
||
|
ஆட்டிநின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியைக் |
|
|
கோட்டினில் குத்திக் குடர்புய்த் துறுத்துக் |
|
|
காட்டிடை நல்ஆக் கதழ்ந்து கிளர்ந்துஓட, |
உரை |
|
ஆபுத் திரன்தான் ஆங்குஅவர்க்கு உரைப்போன் |
|
50
|
நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்; |
|
|
||
|
விடுநில மருங்கின் படுபுல் ஆர்ந்து |
|
|
நெடுநில மருங்கின் மக்கட்கு எல்லாம் |
|
|
பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால் |
|
|
அறம்தரும் நெஞ்சோடு அருள்சுரந்து ஊட்டும் |
|
55
|
இதனொடு வந்த செற்றம் என்னை |
|
|
||
|
முதுமறை அந்தணிர் முன்னியது உரைமோ |
உரை |
|
பொன்அணி நேமி வலங்கொள்சக் கரக்கை |
|
|
மன்உயிர் முதல்வன் மகன்எமக்கு அருளிய |
|
|
அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை |
|
60
|
தெருமரல் உள்ளத்துச் சிறியை நீஅவ் |
|
|
||
|
ஆமகன் ஆதற்கு ஒத்தனை அறியாய் |
|
|
நீமகன் அல்லாய் கேள்என இகழ்தலும், |
உரை |
|
ஆன்மகன் அசலன் மான்மகன் சிருங்கி |
|
|
புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும் |
|
65
|
நரிமகன் அல்லனோ கேச கம்பளன் |
|
|
||
|
ஈங்குஇவர் நுங்குலத்து இருடி கணங்கள்என்று |
|
|
ஓங்குஉயர் பெருஞ்சிறப்பு உரைத்தலும் உண்டால் |
|
|
ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ |
|
|
நான்மறை மாக்காள் நன்னூல் அகத்துஎன, |
உரை |
70
|
ஆங்குஅவர் தம்முள்ஓர் அந்தணன் உரைக்கும் |
|
|
||
|
ஈங்குஇவன் தன்பிறப்பு யான்அறி குவன்என |
உரை |
|
நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் |
|
|
வடமொழி யாட்டி மறைமுறை எய்திக் |
|
|
குமரி பாதம் கொள்கையின் வணங்கித் |
|
75
|
தமரில் தீர்ந்த சாலிஎன் போள்தனை |
|
|
||
|
யாது நின்ஊர் ஈங்குஎன் வரவுஎன |
|
|
மாமறை யாட்டி வருதிறம் உரைக்கும் |
உரை |
|
வார ணாசிஓர் மாமறை முதல்வன் |
|
|
ஆரண உவாத்தி அரும்பெறல் மனைவியான் |
|
80
|
பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகிக் |
|
|
||
|
காப்புக் கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன் |
|
|
எல்பயம் உடைமையின் இரியல் மாக்களொடு |
|
|
தெற்கண் குமரி ஆடிய வருவேன் |
உரை |
|
பொன்தேர்ச் செழியன் கொற்கையம் பேர்உர்க் |
|
85
|
காதவம் கடந்து கோவலர் இருக்கையின் |
|
|
||
|
ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகித் |
|
|
தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன் |
|
|
செல்கதி உண்டோ தீவினை யேற்குஎன்று |
|
|
அல்லல்உற்று அழுத அவள்மகன் ஈங்குஇவன் |
|
90
|
சொல்லுதல் தேற்றேன் சொற்பயம் இன்மையின் |
|
|
||
|
புல்லல்ஓம் பன்மின் புலைமகன் இவன்என. |
உரை |
|
ஆபுத் திரன்பின் அமர்நகை செய்து |
|
|
மாமறை மாக்கள் வருங்குலம் கேண்மோ |
|
|
முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய |
|
95
|
கடவுள் கணிகை காதலஞ் சிறுவர் |
|
|
||
|
அருமறை முதல்வர் அந்தணர் இருவரும் |
|
|
புரிநூல் மார்பீர் பொய்உரை யாமோ |
|
|
சாலிக் குண்டோ தவறுஎன உரைத்து |
|
|
நான்மறை மாக்களை நகுவன் நிற்ப, |
உரை |
100
|
ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே |
|
|
||
|
தாதை பூதியும் தன்மனை கடிதர |
|
|
ஆ கவர் கள்வன்என்று அந்தணர் உறைதரும் |
|
|
கிராமம் எங்கணும் கடிஞையில் கல்இட |
|
|
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் |
|
105
|
தக்கண மதுரை தான்சென்று எய்திச், |
|
|
||
|
சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்து |
|
|
அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத் |
|
|
தங்கினன் வதிந்துஅத் தக்கணப் பேர்ஊர் |
உரை |
|
ஐயக் கடிஞை கையின் ஏந்தி |
|
110
|
மையறு சிறப்பின் மனைதொறும் மறுகிக் |
|
|
||
|
காணார் கேளார் கால்முடப் பட்டோர் |
|
|
பேணுநர் இல்லோர் பிணிநடுக்குற்றோர் |
|
|
யாவரும் வருகஎன்று இசைத்துஉடன் ஊட்டி |
|
|
உண்டுஒழி மிச்சில்உண்டு ஓடுதலை மடுத்துக் |
|
115
|
கண்படை கொள்ளும் காவலன் தான்என். |
உரை |
|
||
|
ஆபுத்திரன் திறன் அறிவித்த காதை முற்றிற்று. |
|
மேல் |