|
18 உதயகுமரன் அம்பலம் புக்க காதை |
|
|
||
|
[ மணிமேகலை அம்பலம் அடைந்தமை |
|
|
சித்திராபதி உதயகுமரனுக்குச் சொல்ல அவன் |
|
|
அம்பலம்புக்க
பாட்டு
]
|
|
|
ஆங்குஅது கேட்டுஆங்கு அரும்புண் அகவயின் | |
|
தீத்துறு செங்கோல் சென்றுசுட் டாங்குக் | |
|
கொதித்த உள்ளமொடு குரம்புகொண்டு ஏறி | |
|
விதிப்புஉறு நெஞ்சினள் வெய்துயிர்த்துக் கலங்கித் | |
5
|
தீர்ப்பல்இவ் அறம்எனச் சித்திரா பதிதான் | |
|
||
|
கூத்தியல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்: | உரை |
|
கோவலன் இறந்தபின் கொடுந்துயர் எய்தி | |
|
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது | |
|
நகுதக் கன்றே நல்நெடும் பேர்ஊர் | |
10
|
இதுதக்கு என்போர்க்கு எள்உரை ஆயது | |
|
||
|
காதலன் வீயக் கடுந்துயர் எய்திப் | |
|
போதல் செய்யா உயிரொடு புலந்து | |
|
நளிஇரும் பொய்கை ஆடுநர் போல | |
|
முளிஎரிப் புகூஉம் முதுகுடிப் பிறந்த | |
15
|
பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தம் | உரை |
|
||
|
கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே | |
|
பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மைஇல் | |
|
யாழ்இனம் போலும் இயல்பினம் அன்றியும் | |
|
நறுந்தாது உண்டு நயன்இல் காலை | |
20
|
வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம் | |
|
||
|
வினைஒழி காலைத் திருவின் செல்வி | |
|
அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம் | |
|
தாபதக் கோலம் தாங்கினம் என்பது | |
|
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே | |
25
|
மாதவி ஈன்ற மணிமே கலைவல்லி | |
|
||
|
போதுஅவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய | உரை |
|
உதய குமரனாம் உலகு ஆள் வண்டின் | |
|
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்தக் | |
|
கைக்கொண்டு ஆங்குஅவள் ஏந்திய கடிஞையைப் | |
30
|
பிச்சை மாக்கள் பிறர்கைக் காட்டி | |
|
||
|
மற்றுஅவன் தன்னால் மணிமே கலைதனைப் | |
|
பொன்தேர்க் கொண்டு போதேன் ஆகில் | உரை |
|
சுடுமண் ஏற்றி அரங்குசூழ் போகி | |
|
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர் | |
35
|
அனையேன் ஆகி அரங்கக் கூத்தியர் | |
|
||
|
மனையகம் புகாஅ மரபினன் என்றே | |
|
வஞ்சினம் சாற்றி நெஞ்சுபுகை உயிர்த்து, | |
|
வஞ்சக் கிளவி மாண்பொடு தேர்ந்து | |
|
செறிவளை நல்லார் சிலர்புறம் சூழக் | |
40
|
குறுவியர் பொடித்த கோலவாள் முகத்தள் | |
|
||
|
கடுந்தேர் வீதி காலின் போகி | |
|
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி | உரை |
|
அரவ வண்டொடு தேன்இனம் ஆர்க்கும் | |
|
தருமணல் ஞெமிரிய திருநாறு ஒருசிறைப் | |
45
|
பவழத் தூணத்துப் | |
|
||
|
திகழ்ஒளி நித்திலச் சித்திர விதானத்து | |
|
விளங்குஒளி பரந்த பளிங்குசெய் மண்டபத்துத் | |
|
துளங்குமான் ஊர்தித் தூமலர்ப் பள்ளி | |
|
வெண்திரை விரிந்த வெண்ணிறச் சாமரை | |
50
|
கொண்டுஇரு மருங்கும் கோதையர் வீச | |
|
||
|
இருந்தோன் திருந்தடி பொருந்திநின்று ஏத்தி, | உரை |
|
திருந்துஎயிறு இலங்கச் செவ்வியின் நக்குஅவன் | |
|
மாதவி மணிமே கலையுடன் எய்திய | |
|
தாபதக் கோலம் தவறுஇன் றோஎன, | உரை |
55
|
அரிதுபெறு சிறப்பில் குருகுகரு உயிர்ப்ப | |
|
||
|
ஒருதனி ஓங்கிய திருமணிக் காஞ்சி | |
|
பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய | |
|
நாடகம் விரும்ப நன்னலங் கவினிக் | |
|
காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்த | |
60
|
உதய குமரன் எனும் ஒருவண் டுஉணீஇய | |
|
||
|
விரைவொடு வந்தேன் வியன்பெரு மூதூர்ப் | |
|
பாழ்ம் பறந்தலை அம்பலத்து ஆயது | |
|
வாழ்கநின் கண்ணி வாய்வாள் வேந்து என | உரை |
|
ஓங்கிய பௌவத் துஉடைகலப் பட்டோன் | |
65
|
வான்புணை பெற்றென மற்று அவட் குஉரைப்போன் | உரை |
|
||
|
மேவிய பளிங்கின் விருந்தின் பாவைஇஃது | |
|
ஓவியச் செய்திஎன்று ஒழிவேன் முன்னர்க் | |
|
காந்தள்அம் செங்கை தளைபிணி விடாஅ | |
|
ஏந்துஇள வனமுலை இறைநெரித் ததூஉம் | |
70
|
ஒத்துஒளிர் பவளத்து உள்ஒளி சிறந்த | |
|
||
|
முத்துக்கூர்த் தன்ன முள்எயிற்று அமுதம் | |
|
அருந்தே மாந்த ஆர்உயிர் தளிர்ப்ப | |
|
விருந்தின் மூரல் அரும்பிய தூஉம் | உரை |
|
மாஇதழ்க் குவளை மலர்புறத்து ஓட்டிக் | |
75
|
காய்வேல் வென்ற கருங்கயல் நெடுங்கண் | |
|
||
|
அறிவுபிறிது ஆகியது ஆயிழை தனக்குஎனச் | |
|
செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும், | |
|
பளிங்குபுறத்து எறிந்த பவளப் பாவைஎன் | |
|
உளங்கொண்டு ஒளித்தாள் உயிர்க்காப் பிட்டுஎன்று | |
80
|
இடையிருள் யாமத்து இருந்தேன் முன்னர்ப் | உரை |
|
||
|
பொன்திகழ் மேனி ஒருத்தி தோன்றிச் | |
|
செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த | |
|
அங்குஅவள் தன்திறம் அயர்ப்பாய் என்றனள் | |
|
தெய்வம் கொல்லோ திப்பியம் கொல்லோ | |
85
|
எய்யா மையலேன் யான்என்று அவன்சொல, | உரை |
|
||
|
சித்திரா பதிதான் சிறுநகை எய்தி | |
|
அத்திறம் விடுவாய் அரசிளங் குரிசில் | |
|
காமக் கள்ளாட்டு இடைமயக் குற்றன | |
|
தேவர்க் காயினும் சிலவோ செப்பின், | உரை |
90
|
மாதவன் மடந்தைக்கு வருந்துதுயர் எய்தி | |
|
||
|
ஆயிரம் செங்கண் அமரர்கோன் பெற்றதும், | |
|
மேருக் குன்றத்து ஊருநீர்ச் சரவணத்து | |
|
அருந்திறல் முனிவர்க்கு ஆர்அணங்கு ஆகிய | |
|
பெரும்பெயர்ப் பெண்டிர் பின்புஉளம் போக்கிய | |
95
|
அங்கி மனையாள் அவரவர் வடிவாய்த் | |
|
||
|
தங்கா வேட்கை தனைஅவள் தணித்ததூஉம் | |
|
கேட்டும் அறிதியோ வாள்திறல் குரிசில் | உரை |
|
கன்னிக் காவலும் கடியின் காவலும் | |
|
தன்உறு கணவன் சாவுறின் காவலும் | |
100
|
நிறையின் காத்துப் பிறர்பிறர்க் காணாது | |
|
||
|
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப் | |
|
பெண்டிர்தம் குடியில் பிறந்தாள் அல்லள் | உரை |
|
நாடவர் காண நல்அரங்கு ஏறி | |
|
ஆடலும் பாடலும் அழகும் காட்டிச் | |
105
|
சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச் | |
|
||
|
செருக்கயல் நெடுங்கண் சுருக்குவலைப் படுத்துக் | |
|
கண்டோர் நெஞ்சம் கொண்டுஅகம் புக்குப் | |
|
பண்தேர் மொழியின் பயன்பல வாங்கி | |
|
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப் | |
110
|
பான்மையில் பிணித்துப் படிற்றுஉரை அடக்குதல் | |
|
||
|
கோல்முறை அன்றோ குமரற்கு என்றலும், | உரை |
|
உதய குமரன் உள்ளம் பிறழ்ந்து | |
|
விரைபரி நெடுந்தேர் மேற்சென்று ஏறி | |
|
ஆயிழை இருந்த அம்பலம் எய்திக் | |
115
|
காடுஅமர் செல்வி கடிப்பசி களைய | |
|
||
|
ஓடுகைக் கொண்டுநின்று ஊட்டுநள் போலத் | |
|
தீப்பசி மாக்கட்குச் செழுஞ்சோறு ஈத்துப் | |
|
பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும், | உரை |
|
இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி | |
120
|
உடம்போடு என்தன் உள்ளகம் புகுந்துஎன் | |
|
||
|
நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி | |
|
நோற்றுஊண் வாழ்க்கையின் நொசிதவம் தாங்கி | |
|
ஏற்றூண் விரும்பிய காரணம் என்எனத் | |
|
தானே தமியள் நின்றோள் முன்னர் | |
125
|
யானே கேட்டல் இயல்புஎனச் சென்று | |
|
||
|
நல்லாய் என்கொல் நல்தவம் புரிந்தது | |
|
சொல்லாய் என்று துணிந்துஉடன் கேட்ப, | உரை |
|
என்அமர் காதலன் இராகுலன் ஈங்குஇவன் | |
|
தன்அடி தொழுதலும் தகவுஎன வணங்கி | |
130
|
அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும | |
|
||
|
இறைவளை முன்கை ஈங்குஇவன் பற்றினும் | |
|
தொன்று காதலன் சொல்எதிர் மறுத்தல் | |
|
நன்றி அன்றுஎன நடுங்கினள் மயங்கிக் | உரை |
|
கேட்டது மொழிவேன் கேள்வி யாளரில் | |
135
|
தோட்ட செவியைநீ ஆகுவை யாம்எனில் | |
|
||
|
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும் | |
|
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம் | |
|
மக்கள் யாக்கை இதுஎன உணர்ந்து | |
|
மிக்க நல்அறம் விரும்புதல் புரிந்தேன் | உரை |
140
|
மண்டுஅமர் முருக்கும் களிறுஅனை யார்க்குப் | |
|
||
|
பெண்டிர் கூறும் பேர்அறிவு உண்டோ | |
|
கேட்டனை ஆயின் வேட்டது செய்கென, | உரை |
|
வாள்திறல் குருசிலை மடக்கொடி நீங்கி | |
|
முத்தை முதல்வி முதியாள் இருந்த | |
145
|
குச்சரக் குடிகை தன்அகம் புக்குஆங்கு | |
|
||
|
ஆடவர் செய்தி அறிகுநர் யார்எனத் | |
|
தோடுஅலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி | |
|
மாய விஞ்சை மந்திரம் ஓதிக் | |
|
காயசண் டிகைஎனும் காரிகை வடிவாய் | |
150
|
மணிமே கலைதான் வந்து தோன்ற | உரை |
|
||
|
தாரோன் அவள்பால் புக்குக் | |
|
குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப் | |
|
பிச்சைப் பாத்திரம் பெரும்பசி உழந்த | |
|
காயசண் டிகைதன் கையில் காட்டி | |
155
|
மாயையின் ஒளித்த மணிமே கலைதனை | |
|
||
|
ஈங்குஇம் மண்ணீட்டு யார்என உணர்கேன் | |
|
ஆங்குஅவள் இவள்என்று அருளாய் ஆயிடின் | |
|
பல்நா ளாயினும் பாடு கிடப்பேன் | உரை |
|
இன்னும் கேளாய் இமையோர் பாவாய் | |
160
|
பவளச் செவ்வாய்த் தவளவாள் நகையும் | |
|
||
|
அஞ்சனம் சேராச் செங்கயல் நெடுங்கணும் | |
|
முரிந்துகடை நெரிய வளைந்தசிலைப் புருவமும் | |
|
குவிமுள் கருவியும் கோணமும் கூர்நுனைக் | |
|
கவைமுள் கருவியும் ஆகிக் கடிகொளக் | |
165
|
கல்விப் பாகரில் காப்புவலை ஓட்டி | |
|
||
|
வல்வாய் யாழின் மெல்லிதின் விளங்க | |
|
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப் | |
|
புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென | |
|
முதியாள் உன்தன் கோட்டம் புகுந்த | |
170
|
மதிவாள் முகத்து மணிமே கலைதனை | |
|
||
|
ஒழியப் போகேன் உன்அடி தொட்டேன் | |
|
இதுகுறை என்றனன் இறைமகன் தான்என். | உரை |
|
||
|
உதயகுமரன் அம்பலம் புக்க காதை முற்றிற்று. |
|
மேல் |