|
|
தச்சன் செய்த சிறு மா வையம், |
|
ஊர்ந்து இன்புறாஅர்ஆயினும், கையின் |
|
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல, |
|
உற்று இன்புறேஎம்ஆயினும், நற்றோர்ப் |
|
பொய்கை ஊரன் கேண்மை |
|
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே. |
உரை |
|
தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது. - தும்பிசேர்கீரன் |
|
''கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை, |
|
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ, |
|
ஐது தொடை மாண்ட கோதை போல, |
|
நறிய நல்லோள் மேனி |
|
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே. |
உரை |
|
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார் |
|
''ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்'' எனச் |
|
செய் வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு |
|
அம் மா அரிவையும் வருமோ? |
|
எம்மை உய்த்தியோ? உரைத்திசின்- நெஞ்சே! |
உரை |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - உகாய்க்குடி கிழார் |
|
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென, |
|
புன் தலை மன்றம் நோக்கி, மாலை |
|
மடக் கண் குழவி அலம்வந்தன்ன |
|
நோயேம் ஆகுதல் அறிந்தும், |
|
சேயர்-தோழி!-சேய் நாட்டோரே. |
உரை |
|
பிரிவிடை ஆற்றாமை கண்டு, ''வருவர்'' எனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கருவூர்க் கதப்பிள்ளை |
|
வன் பரற் தெள் அறல் பருகிய இரலை தன் |
|
இன்புறு துணையொடு மறுவந்து உகள, |
|
தான் வந்தன்றே, தளி தரு தண் கார்- |
|
வாராது உறையுநர் வரல் நசைஇ |
|
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே. |
உரை |
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. - கோவூர் கிழார் |
|
மடவமன்ற, தடவு நிலைக் கொன்றை- |
|
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய |
|
பருவம் வாராஅளவை, நெரிதரக் |
|
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த, |
|
வம்ப மாரியைக் கார் என மதித்தே. |
உரை |
|
பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, ''பருவம் அன்று'' என்று வற்புறீஇயது - கோவர்த்தனார் |
|
உள்ளார்கொல்லோ-தோழி!-கிள்ளை |
|
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம் |
|
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப் |
|
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும் |
|
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே? |
உரை |
|
பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது. - அள்ளூர் நன்முல்லையார் |
|
பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின் |
|
ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும் |
|
அரும் பனி அற்சிரம் தீர்க்கும் |
|
மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே. |
உரை |
|
பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது. - அள்ளூர் நன்முல்லையார் |
|
கருங் கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென, |
|
கைம்மை உய்யாக் காமர் மந்தி |
|
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி, |
|
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும் |
|
சாரல் நாட! நடு நாள் |
|
வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே! |
உரை |
|
தோழி இரவுக்குறி மறுத்தது. - கடுந்தோட் கரவீரன் |
|
ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள் |
|
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே; |
|
இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்; |
|
சில மெல்லியவே கிளவி; |
|
அனை மெல்லியல் யான் முயங்குங்காலே. |
உரை |
|
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஓரம்போகியார் |
|