|
18
உதயகுமரன் அம்பலம் புக்க காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை அம்பலம் அடைந்தமை
|
|
|
சித்திராபதி
உதயகுமரனுக்குச் சொல்ல அவன்
|
|
|
அம்பலம்புக்க
பாட்டு
]
|
|
|
|
|
|
ஆங்குஅது
கேட்டுஆங்கு அரும்புண் அகவயின் |
|
|
தீத்துறு
செங்கோல் சென்றுசுட் டாங்குக் |
|
|
கொதித்த
உள்ளமொடு குரம்புகொண்டு ஏறி |
|
|
விதிப்புஉறு
நெஞ்சினள் வெய்துயிர்த்துக் கலங்கித் |
|
5
|
தீர்ப்பல்இவ் அறம்எனச் சித்திரா பதிதான் |
|
|
|
|
|
கூத்தியல்
மடந்தையர்க்கு எல்லாம் கூறும்: |
உரை
|
|
கோவலன்
இறந்தபின் கொடுந்துயர் எய்தி |
|
|
மாதவி மாதவர்
பள்ளியுள் அடைந்தது |
|
|
நகுதக் கன்றே
நல்நெடும் பேர்ஊர் |
|
10
|
இதுதக்கு
என்போர்க்கு எள்உரை ஆயது |
|
|
|
|
|
காதலன்
வீயக் கடுந்துயர் எய்திப் |
|
|
போதல் செய்யா
உயிரொடு புலந்து |
|
|
நளிஇரும்
பொய்கை ஆடுநர் போல |
|
|
முளிஎரிப்
புகூஉம் முதுகுடிப் பிறந்த |
|
15
|
பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தம் |
உரை
|
|
|
|
|
கைத்தூண்
வாழ்க்கை கடவியம் அன்றே |
|
|
பாண்மகன்
பட்டுழிப் படூஉம் பான்மைஇல் |
|
|
யாழ்இனம்
போலும் இயல்பினம் அன்றியும் |
|
|
நறுந்தாது
உண்டு நயன்இல் காலை |
|
20
|
வறும்பூத்
துறக்கும் வண்டு போல்குவம் |
|
|
|
|
|
வினைஒழி
காலைத் திருவின் செல்வி |
|
|
அனையேம்
ஆகி ஆடவர்த் துறப்பேம் |
|
|
தாபதக்
கோலம் தாங்கினம் என்பது |
|
|
யாவரும்
நகூஉம் இயல்பினது அன்றே |
|
25
|
மாதவி ஈன்ற
மணிமே கலைவல்லி |
|
|
|
|
|
போதுஅவிழ்
செவ்வி பொருந்துதல் விரும்பிய |
உரை
|
|
உதய குமரனாம்
உலகு ஆள் வண்டின் |
|
|
சிதையா
உள்ளம் செவ்விதின் அருந்தக் |
|
|
கைக்கொண்டு
ஆங்குஅவள் ஏந்திய கடிஞையைப் |
|
30
|
பிச்சை
மாக்கள் பிறர்கைக் காட்டி |
|
|
|
|
|
மற்றுஅவன்
தன்னால் மணிமே கலைதனைப் |
|
|
பொன்தேர்க்
கொண்டு போதேன் ஆகில் |
உரை
|
|
சுடுமண் ஏற்றி
அரங்குசூழ் போகி |
|
|
வடுவொடு
வாழும் மடந்தையர் தம்மோர் |
|
35
|
அனையேன்
ஆகி அரங்கக் கூத்தியர் |
|
|
|
|
|
மனையகம்
புகாஅ மரபினன் என்றே |
|
|
வஞ்சினம்
சாற்றி நெஞ்சுபுகை உயிர்த்து, |
|
|
வஞ்சக் கிளவி
மாண்பொடு தேர்ந்து |
|
|
செறிவளை
நல்லார் சிலர்புறம் சூழக் |
|
40
|
குறுவியர்
பொடித்த கோலவாள் முகத்தள் |
|
|
|
|
|
கடுந்தேர்
வீதி காலின் போகி |
|
|
இளங்கோ
வேந்தன் இருப்பிடம் குறுகி |
உரை
|
|
அரவ வண்டொடு
தேன்இனம் ஆர்க்கும் |
|
|
தருமணல்
ஞெமிரிய திருநாறு ஒருசிறைப் |
|
45
|
பவழத் தூணத்துப்
| |
|
|
|
|
திகழ்ஒளி
நித்திலச் சித்திர விதானத்து |
|
|
விளங்குஒளி
பரந்த பளிங்குசெய் மண்டபத்துத் |
|
|
துளங்குமான்
ஊர்தித் தூமலர்ப் பள்ளி |
|
|
வெண்திரை
விரிந்த வெண்ணிறச் சாமரை |
|
50
|
கொண்டுஇரு
மருங்கும் கோதையர் வீச |
|
|
|
|
|
இருந்தோன்
திருந்தடி பொருந்திநின்று ஏத்தி, |
உரை
|
|
திருந்துஎயிறு
இலங்கச் செவ்வியின் நக்குஅவன் |
|
|
மாதவி மணிமே
கலையுடன் எய்திய |
|
|
தாபதக் கோலம்
தவறுஇன் றோஎன, |
உரை
|
55
|
அரிதுபெறு
சிறப்பில் குருகுகரு உயிர்ப்ப |
|
|
|
|
|
ஒருதனி ஓங்கிய
திருமணிக் காஞ்சி |
|
|
பாடல்சால்
சிறப்பின் பரதத்து ஓங்கிய |
|
|
நாடகம் விரும்ப
நன்னலங் கவினிக் |
|
|
காமர் செவ்விக்
கடிமலர் அவிழ்ந்த |
|
60
|
உதய குமரன்
எனும் ஒருவண் டுஉணீஇய |
|
|
|
|
|
விரைவொடு
வந்தேன் வியன்பெரு மூதூர்ப் |
|
|
பாழ்ம் பறந்தலை
அம்பலத்து ஆயது |
|
|
வாழ்கநின்
கண்ணி வாய்வாள் வேந்து என |
உரை
|
|
ஓங்கிய
பௌவத் துஉடைகலப் பட்டோன் |
|
65
|
வான்புணை
பெற்றென மற்று அவட் குஉரைப்போன் |
உரை
|
|
|
|
|
மேவிய பளிங்கின்
விருந்தின் பாவைஇஃது |
|
|
ஓவியச்
செய்திஎன்று ஒழிவேன் முன்னர்க் |
|
|
காந்தள்அம்
செங்கை தளைபிணி விடாஅ |
|
|
ஏந்துஇள
வனமுலை இறைநெரித் ததூஉம் |
|
70
|
ஒத்துஒளிர்
பவளத்து உள்ஒளி சிறந்த |
|
|
|
|
|
முத்துக்கூர்த்
தன்ன முள்எயிற்று அமுதம் |
|
|
அருந்தே
மாந்த ஆர்உயிர் தளிர்ப்ப |
|
|
விருந்தின்
மூரல் அரும்பிய தூஉம் |
உரை
|
|
மாஇதழ்க்
குவளை மலர்புறத்து ஓட்டிக் |
|
75
|
காய்வேல்
வென்ற கருங்கயல் நெடுங்கண் |
|
|
|
|
|
அறிவுபிறிது
ஆகியது ஆயிழை தனக்குஎனச் |
|
|
செவியகம்
புகூஉச் சென்ற செவ்வியும், |
|
|
பளிங்குபுறத்து
எறிந்த பவளப் பாவைஎன் |
|
|
உளங்கொண்டு
ஒளித்தாள் உயிர்க்காப் பிட்டுஎன்று |
|
80
|
இடையிருள்
யாமத்து இருந்தேன் முன்னர்ப் |
உரை
|
|
|
|
|
பொன்திகழ்
மேனி ஒருத்தி தோன்றிச் |
|
|
செங்கோல்
காட்டிச் செய்தவம் புரிந்த |
|
|
அங்குஅவள்
தன்திறம் அயர்ப்பாய் என்றனள் |
|
|
தெய்வம்
கொல்லோ திப்பியம் கொல்லோ |
|
85
|
எய்யா மையலேன்
யான்என்று அவன்சொல, |
உரை
|
|
|
|
|
சித்திரா
பதிதான் சிறுநகை எய்தி |
|
|
அத்திறம்
விடுவாய் அரசிளங் குரிசில் |
|
|
காமக் கள்ளாட்டு
இடைமயக் குற்றன |
|
|
தேவர்க்
காயினும் சிலவோ செப்பின், |
உரை
|
90
|
மாதவன்
மடந்தைக்கு வருந்துதுயர் எய்தி |
|
|
|
|
|
ஆயிரம்
செங்கண் அமரர்கோன் பெற்றதும், |
|
|
மேருக் குன்றத்து
ஊருநீர்ச் சரவணத்து |
|
|
அருந்திறல்
முனிவர்க்கு ஆர்அணங்கு ஆகிய |
|
|
பெரும்பெயர்ப்
பெண்டிர் பின்புஉளம் போக்கிய |
|
95
|
அங்கி மனையாள்
அவரவர் வடிவாய்த் |
|
|
|
|
|
தங்கா வேட்கை
தனைஅவள் தணித்ததூஉம் |
|
|
கேட்டும்
அறிதியோ வாள்திறல் குரிசில் |
உரை
|
|
கன்னிக்
காவலும் கடியின் காவலும் |
|
|
தன்உறு கணவன்
சாவுறின் காவலும் |
|
100
|
நிறையின்
காத்துப் பிறர்பிறர்க் காணாது |
|
|
|
|
|
கொண்டோன்
அல்லது தெய்வமும் பேணாப் |
|
|
பெண்டிர்தம்
குடியில் பிறந்தாள் அல்லள் |
உரை
|
|
நாடவர்
காண நல்அரங்கு ஏறி |
|
|
ஆடலும் பாடலும்
அழகும் காட்டிச் |
|
105
|
சுருப்புநாண்
கருப்புவில் அருப்புக்கணை தூவச் |
|
|
|
|
|
செருக்கயல்
நெடுங்கண் சுருக்குவலைப் படுத்துக் |
|
|
கண்டோர்
நெஞ்சம் கொண்டுஅகம் புக்குப் |
|
|
பண்தேர்
மொழியின் பயன்பல வாங்கி |
|
|
வண்டின்
துறக்கும் கொண்டி மகளிரைப் |
|
110
|
பான்மையில்
பிணித்துப் படிற்றுஉரை அடக்குதல் |
|
|
|
|
|
கோல்முறை
அன்றோ குமரற்கு என்றலும், |
உரை
|
|
உதய குமரன்
உள்ளம் பிறழ்ந்து |
|
|
விரைபரி
நெடுந்தேர் மேற்சென்று ஏறி |
|
|
ஆயிழை இருந்த
அம்பலம் எய்திக் |
|
115
|
காடுஅமர்
செல்வி கடிப்பசி களைய |
|
|
|
|
|
ஓடுகைக்
கொண்டுநின்று ஊட்டுநள் போலத் |
|
|
தீப்பசி
மாக்கட்குச் செழுஞ்சோறு ஈத்துப் |
|
|
பாத்திரம்
ஏந்திய பாவையைக் காண்டலும், |
உரை
|
|
இடங்கழி
காமமொடு அடங்கான் ஆகி |
|
120
|
உடம்போடு
என்தன் உள்ளகம் புகுந்துஎன் |
|
|
|
|
|
நெஞ்சம்
கவர்ந்த வஞ்சக் கள்வி |
|
|
நோற்றுஊண்
வாழ்க்கையின் நொசிதவம் தாங்கி |
|
|
ஏற்றூண்
விரும்பிய காரணம் என்எனத் |
|
|
தானே தமியள் நின்றோள் முன்னர் |
|
125
|
யானே கேட்டல்
இயல்புஎனச் சென்று |
|
|
|
|
|
நல்லாய்
என்கொல் நல்தவம் புரிந்தது |
|
|
சொல்லாய்
என்று துணிந்துஉடன் கேட்ப, |
உரை
|
|
என்அமர்
காதலன் இராகுலன் ஈங்குஇவன் |
|
|
தன்அடி தொழுதலும்
தகவுஎன வணங்கி |
|
130
|
அறைபோய்
நெஞ்சம் அவன்பால் அணுகினும |
|
|
|
|
|
இறைவளை முன்கை
ஈங்குஇவன் பற்றினும் |
|
|
தொன்று காதலன்
சொல்எதிர் மறுத்தல் |
|
|
நன்றி அன்றுஎன
நடுங்கினள் மயங்கிக் |
உரை
|
|
கேட்டது மொழிவேன்
கேள்வி யாளரில் |
|
135
|
தோட்ட
செவியைநீ ஆகுவை யாம்எனில் |
|
|
|
|
|
பிறத்தலும்
மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும் |
|
|
இறத்தலும்
உடையது இடும்பைக் கொள்கலம் |
|
|
மக்கள்
யாக்கை இதுஎன உணர்ந்து |
|
|
மிக்க நல்அறம்
விரும்புதல் புரிந்தேன் |
உரை
|
140
|
மண்டுஅமர்
முருக்கும் களிறுஅனை யார்க்குப் |
|
|
|
|
|
பெண்டிர்
கூறும் பேர்அறிவு உண்டோ |
|
|
கேட்டனை
ஆயின் வேட்டது செய்கென, |
உரை
|
|
வாள்திறல்
குருசிலை மடக்கொடி நீங்கி |
|
|
முத்தை முதல்வி
முதியாள் இருந்த |
|
145
|
குச்சரக்
குடிகை தன்அகம் புக்குஆங்கு |
|
|
|
|
|
ஆடவர் செய்தி
அறிகுநர் யார்எனத் |
|
|
தோடுஅலர்
கோதையைத் தொழுதனள் ஏத்தி |
|
|
மாய விஞ்சை
மந்திரம் ஓதிக் |
|
|
காயசண்
டிகைஎனும் காரிகை வடிவாய் |
|
150
|
மணிமே கலைதான்
வந்து தோன்ற |
உரை
|
|
|
|
|
தாரோன் அவள்பால் புக்குக் |
|
|
குச்சரக்
குடிகைக் குமரியை மரீஇப் |
|
|
பிச்சைப்
பாத்திரம் பெரும்பசி உழந்த |
|
|
காயசண் டிகைதன்
கையில் காட்டி |
|
155
|
மாயையின்
ஒளித்த மணிமே கலைதனை |
|
|
|
|
|
ஈங்குஇம்
மண்ணீட்டு யார்என உணர்கேன் |
|
|
ஆங்குஅவள்
இவள்என்று அருளாய் ஆயிடின் |
|
|
பல்நா ளாயினும்
பாடு கிடப்பேன் |
உரை
|
|
இன்னும்
கேளாய் இமையோர் பாவாய் |
|
160
|
பவளச் செவ்வாய்த்
தவளவாள் நகையும் |
|
|
|
|
|
அஞ்சனம்
சேராச் செங்கயல் நெடுங்கணும் |
|
|
முரிந்துகடை
நெரிய வளைந்தசிலைப் புருவமும் |
|
|
குவிமுள் கருவியும்
கோணமும் கூர்நுனைக் |
|
|
கவைமுள்
கருவியும் ஆகிக் கடிகொளக் |
|
165
|
கல்விப்
பாகரில் காப்புவலை ஓட்டி |
|
|
|
|
|
வல்வாய்
யாழின் மெல்லிதின் விளங்க |
|
|
முதுக்குறை
முதுமொழி எடுத்துக் காட்டிப் |
|
|
புதுக்கோள்
யானை வேட்டம் வாய்த்தென |
|
|
முதியாள்
உன்தன் கோட்டம் புகுந்த |
|
170
|
மதிவாள்
முகத்து மணிமே கலைதனை |
|
|
|
|
|
ஒழியப்
போகேன் உன்அடி தொட்டேன் |
|
|
இதுகுறை என்றனன்
இறைமகன் தான்என். |
உரை
|
|
|
|
|
உதயகுமரன் அம்பலம் புக்க
காதை முற்றிற்று.
|
|
|