Manimeagalai

18 உதயகுமரன் அம்பலம் புக்க காதை

 
 

[ மணிமேகலை அம்பலம் அடைந்தமை

 

    சித்திராபதி உதயகுமரனுக்குச் சொல்ல அவன்

 
அம்பலம்புக்க பாட்டு ]
 
 
ஆங்குஅது கேட்டுஆங்கு அரும்புண் அகவயின்
தீத்துறு செங்கோல் சென்றுசுட் டாங்குக்
கொதித்த உள்ளமொடு குரம்புகொண்டு ஏறி
விதிப்புஉறு நெஞ்சினள் வெய்துயிர்த்துக் கலங்கித்
5
தீர்ப்பல்இவ் அறம்எனச் சித்திரா பதிதான்
கூத்தியல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்:
கோவலன் இறந்தபின் கொடுந்துயர் எய்தி
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது
நகுதக் கன்றே நல்நெடும் பேர்ஊர்
10
இதுதக்கு என்போர்க்கு எள்உரை ஆயது
காதலன் வீயக் கடுந்துயர் எய்திப்
போதல் செய்யா உயிரொடு புலந்து
நளிஇரும் பொய்கை ஆடுநர் போல
முளிஎரிப் புகூஉம் முதுகுடிப் பிறந்த
15
பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தம்
கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே
பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மைஇல்
யாழ்இனம் போலும் இயல்பினம் அன்றியும்
நறுந்தாது உண்டு நயன்இல் காலை
20
வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்
வினைஒழி காலைத் திருவின் செல்வி
அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்
தாபதக் கோலம் தாங்கினம் என்பது
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே
25
மாதவி ஈன்ற மணிமே கலைவல்லி
போதுஅவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய
உதய குமரனாம் உலகு ஆள் வண்டின்
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்தக்
கைக்கொண்டு ஆங்குஅவள் ஏந்திய கடிஞையைப்
30
பிச்சை மாக்கள் பிறர்கைக் காட்டி
மற்றுஅவன் தன்னால் மணிமே கலைதனைப்
பொன்தேர்க் கொண்டு போதேன் ஆகில்
சுடுமண் ஏற்றி அரங்குசூழ் போகி
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
35
அனையேன் ஆகி அரங்கக் கூத்தியர்
மனையகம் புகாஅ மரபினன் என்றே
வஞ்சினம் சாற்றி நெஞ்சுபுகை உயிர்த்து,
வஞ்சக் கிளவி மாண்பொடு தேர்ந்து
செறிவளை நல்லார் சிலர்புறம் சூழக்
40
குறுவியர் பொடித்த கோலவாள் முகத்தள்
கடுந்தேர் வீதி காலின் போகி
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி
அரவ வண்டொடு தேன்இனம் ஆர்க்கும்
தருமணல் ஞெமிரிய திருநாறு ஒருசிறைப்
45
பவழத் தூணத்துப்
திகழ்ஒளி நித்திலச் சித்திர விதானத்து
விளங்குஒளி பரந்த பளிங்குசெய் மண்டபத்துத்
துளங்குமான் ஊர்தித் தூமலர்ப் பள்ளி
வெண்திரை விரிந்த வெண்ணிறச் சாமரை
50
கொண்டுஇரு மருங்கும் கோதையர் வீச
இருந்தோன் திருந்தடி பொருந்திநின்று ஏத்தி,
திருந்துஎயிறு இலங்கச் செவ்வியின் நக்குஅவன்
மாதவி மணிமே கலையுடன் எய்திய
தாபதக் கோலம் தவறுஇன் றோஎன,
55
அரிதுபெறு சிறப்பில் குருகுகரு உயிர்ப்ப
ஒருதனி ஓங்கிய திருமணிக் காஞ்சி
பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
நாடகம் விரும்ப நன்னலங் கவினிக்
காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்த
60
உதய குமரன் எனும் ஒருவண் டுஉணீஇய
விரைவொடு வந்தேன் வியன்பெரு மூதூர்ப்
பாழ்ம் பறந்தலை அம்பலத்து ஆயது
வாழ்கநின் கண்ணி வாய்வாள் வேந்து என
ஓங்கிய பௌவத் துஉடைகலப் பட்டோன்
65
வான்புணை பெற்றென மற்று அவட் குஉரைப்போன்
மேவிய பளிங்கின் விருந்தின் பாவைஇஃது
ஓவியச் செய்திஎன்று ஒழிவேன் முன்னர்க்
காந்தள்அம் செங்கை தளைபிணி விடாஅ
ஏந்துஇள வனமுலை இறைநெரித் ததூஉம்
70
ஒத்துஒளிர் பவளத்து உள்ஒளி சிறந்த
முத்துக்கூர்த் தன்ன முள்எயிற்று அமுதம்
அருந்தே மாந்த ஆர்உயிர் தளிர்ப்ப
விருந்தின் மூரல் அரும்பிய தூஉம்
மாஇதழ்க் குவளை மலர்புறத்து ஓட்டிக்
75
காய்வேல் வென்ற கருங்கயல் நெடுங்கண்
அறிவுபிறிது ஆகியது ஆயிழை தனக்குஎனச்
செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும்,
பளிங்குபுறத்து எறிந்த பவளப் பாவைஎன்
உளங்கொண்டு ஒளித்தாள் உயிர்க்காப் பிட்டுஎன்று
80
இடையிருள் யாமத்து இருந்தேன் முன்னர்ப்
பொன்திகழ் மேனி ஒருத்தி தோன்றிச்
செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த
அங்குஅவள் தன்திறம் அயர்ப்பாய் என்றனள்
தெய்வம் கொல்லோ திப்பியம் கொல்லோ
85
எய்யா மையலேன் யான்என்று அவன்சொல,
சித்திரா பதிதான் சிறுநகை எய்தி
அத்திறம் விடுவாய் அரசிளங் குரிசில்
காமக் கள்ளாட்டு இடைமயக் குற்றன
தேவர்க் காயினும் சிலவோ செப்பின்,
90
மாதவன் மடந்தைக்கு வருந்துதுயர் எய்தி
ஆயிரம் செங்கண் அமரர்கோன் பெற்றதும்,
மேருக் குன்றத்து ஊருநீர்ச் சரவணத்து
அருந்திறல் முனிவர்க்கு ஆர்அணங்கு ஆகிய
பெரும்பெயர்ப் பெண்டிர் பின்புஉளம் போக்கிய
95
அங்கி மனையாள் அவரவர் வடிவாய்த்
தங்கா வேட்கை தனைஅவள் தணித்ததூஉம்
கேட்டும் அறிதியோ வாள்திறல் குரிசில்
கன்னிக் காவலும் கடியின் காவலும்
தன்உறு கணவன் சாவுறின் காவலும்
100
நிறையின் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர்தம் குடியில் பிறந்தாள் அல்லள்
நாடவர் காண நல்அரங்கு ஏறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டிச்
105
சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச்
செருக்கயல் நெடுங்கண் சுருக்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டுஅகம் புக்குப்
பண்தேர் மொழியின் பயன்பல வாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்
110
பான்மையில் பிணித்துப் படிற்றுஉரை அடக்குதல்
கோல்முறை அன்றோ குமரற்கு என்றலும்,
உதய குமரன் உள்ளம் பிறழ்ந்து
விரைபரி நெடுந்தேர் மேற்சென்று ஏறி
ஆயிழை இருந்த அம்பலம் எய்திக்
115
காடுஅமர் செல்வி கடிப்பசி களைய
ஓடுகைக் கொண்டுநின்று ஊட்டுநள் போலத்
தீப்பசி மாக்கட்குச் செழுஞ்சோறு ஈத்துப்
பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும்,
இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி
120
உடம்போடு என்தன் உள்ளகம் புகுந்துஎன்
நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி
நோற்றுஊண் வாழ்க்கையின் நொசிதவம் தாங்கி
ஏற்றூண் விரும்பிய காரணம் என்எனத்
தானே தமியள் நின்றோள் முன்னர்
125
யானே கேட்டல் இயல்புஎனச் சென்று
நல்லாய் என்கொல் நல்தவம் புரிந்தது
சொல்லாய் என்று துணிந்துஉடன் கேட்ப,
என்அமர் காதலன் இராகுலன் ஈங்குஇவன்
தன்அடி தொழுதலும் தகவுஎன வணங்கி
130
அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும
இறைவளை முன்கை ஈங்குஇவன் பற்றினும்
தொன்று காதலன் சொல்எதிர் மறுத்தல்
நன்றி அன்றுஎன நடுங்கினள் மயங்கிக்
கேட்டது மொழிவேன் கேள்வி யாளரில்
135
தோட்ட செவியைநீ ஆகுவை யாம்எனில்
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இதுஎன உணர்ந்து
மிக்க நல்அறம் விரும்புதல் புரிந்தேன்
140
மண்டுஅமர் முருக்கும் களிறுஅனை யார்க்குப்
பெண்டிர் கூறும் பேர்அறிவு உண்டோ
கேட்டனை ஆயின் வேட்டது செய்கென,
வாள்திறல் குருசிலை மடக்கொடி நீங்கி
முத்தை முதல்வி முதியாள் இருந்த
145
குச்சரக் குடிகை தன்அகம் புக்குஆங்கு
ஆடவர் செய்தி அறிகுநர் யார்எனத்
தோடுஅலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி
மாய விஞ்சை மந்திரம் ஓதிக்
காயசண் டிகைஎனும் காரிகை வடிவாய்
150
மணிமே கலைதான் வந்து தோன்ற
தாரோன் அவள்பால் புக்குக்  
குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப்
பிச்சைப் பாத்திரம் பெரும்பசி உழந்த
காயசண் டிகைதன் கையில் காட்டி
155
மாயையின் ஒளித்த மணிமே கலைதனை
ஈங்குஇம் மண்ணீட்டு யார்என உணர்கேன்
ஆங்குஅவள் இவள்என்று அருளாய் ஆயிடின்
பல்நா ளாயினும் பாடு கிடப்பேன்
இன்னும் கேளாய் இமையோர் பாவாய்
160
பவளச் செவ்வாய்த் தவளவாள் நகையும்
அஞ்சனம் சேராச் செங்கயல் நெடுங்கணும்
முரிந்துகடை நெரிய வளைந்தசிலைப் புருவமும்
குவிமுள் கருவியும் கோணமும் கூர்நுனைக்
கவைமுள் கருவியும் ஆகிக் கடிகொளக்
165
கல்விப் பாகரில் காப்புவலை ஓட்டி
வல்வாய் யாழின் மெல்லிதின் விளங்க
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென
முதியாள் உன்தன் கோட்டம் புகுந்த
170
மதிவாள் முகத்து மணிமே கலைதனை
ஒழியப் போகேன் உன்அடி தொட்டேன்
இதுகுறை என்றனன் இறைமகன் தான்என்.
 

உதயகுமரன் அம்பலம் புக்க காதை முற்றிற்று.