தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.6 தொகுப்புரை

1.6 தொகுப்புரை

அன்பு மாணவர்களே, இப்பாடத்தில் கிறித்தவக் கம்பர் என்று
பாராட்டப் பெறும் கிருஷ்ணபிள்ளை இயற்றிய இரட்சணிய
யாத்திரிகம் என்னும் தமிழ்க் காப்பியம் பற்றி அறிந்தீர்கள்.
காப்பியத்தில் அமைந்துள்ள கவிதை நயங்கள், கற்பனை வளம்
இவற்றைச் சுவைத்தீர்கள், அருமை மிக்க வாழ்வியல்
கருத்துகளையும் பெற்றீர்கள் அல்லவா?

1)
இரட்சணிய யாத்திரிக ஆசிரியர் கையாளும் தமிழ்
- வடமொழிக் கலப்பு நடையை எவ்வாறு
குறிப்பிடுவர்?
2)
இந்தக் காப்பியத்தில் எந்தத் தமிழ்க் காப்பியத்தின்
செல்வாக்கு அதிகமாக உள்ளது?
3)
இக்காப்பியத்தின் தனிச் சிறப்புகளுள்
முதன்மையானதாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
4)
தமிழில் தேவாரப் பாடல்களை எழுதியுள்ள
நாயன்மார் இருவரைக் குறிப்பிடுக.
5)
கிருஷ்ண பிள்ளை தம் காப்பியத்தில்
பயன்படுத்தும் இந்து சமயத் (சைவ அல்லது
வைணவத்) தொடர் ஒன்றைக் குறிப்பிடுக.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:10:17(இந்திய நேரம்)