தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொல் முறை இயற்கையின்

தொல் முறை இயற்கையின்
2. திருமால்

திருமாலின் பெருமை
ஊழிகளின் தோற்றம்
தொல் முறை இயற்கையின் மதியொ
. ... ... ... ... ... ... ... மரபிற்று ஆக,
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல,
5
கரு வளர் வானத்து இசையின் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;
செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
10
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
15
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை

வராக கற்பம்
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுது.

திருமாலின் நிலைகள்
20
நீயே, 'வளையொடு புரையும் வாலியோற்கு அவன்
இளையன்' என்போர்க்கு இளையை ஆதலும்,
'புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு
முதியை' என்போர்க்கு முதுமை தோன்றலும்,
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
25
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்,
இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச் சிறப்பே.

திருமாலின் சிறப்பு
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில
30
நித்தில மதாணி அத்தகு மதி மறுச்
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு,
'புள்ளி நிலனும் புரைபடல் அரிது' என,
35
உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று.

படைச் சிறப்பு
ஒடியா உள்ளமொடு உருத்து, ஒருங்கு உடன் இயைந்து,
இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர்
கொடி அறுபு இறுபு, செவி செவிடு படுபு,
முடிகள் அதிர, படிநிலை தளர,
40
நனி முரல் வளை: முடி அழிபு, இழிபு,
தலை இறுபு தாரொடு புரள
நிலை தொலைபு, வேர், தூர், மடல்,
குருகு, பறியா நீள் இரும் பனைமிசைப்
பல பதினாயிரம் குலை தரை உதிர்வபோல்
45
நில்லாது, ஒருமுறை கொய்பு கூடி,
ஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு,
அளறு சொரிபு, நிலம் சோர,
சேரார் இன் உயிர் செகுக்கும்
போர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே:
50
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே;
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.

திருமால் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புகள்
நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;
கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்;
வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த
55
நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும்,
சாயல் நினது, வான் நிறை என்னும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே:
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்
எவ் வயினோயும் நீயே.

உருவமும், உணவும், வெளிப்பாடும்
60
செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே!
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,
65
நின் உருபுடன் உண்டி;
பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு.

பல் புகழும் பரவலும்
வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,
மூவா மரபும் ஓவா நோன்மையும்
சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்
... ... ... .. .... .... ... ... மரபினோய் நின் அடி
தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,
75
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
'கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!' எனவே.

கடவுள் வாழ்த்து
கீரந்தையார் பாட்டு
நன்னாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 27-09-2019 15:08:37(இந்திய நேரம்)