தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சேம்பு
178. குறிஞ்சி
வயிரத்தன்ன வை ஏந்து மருப்பின்,
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி
பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி,
நீலத்தன்ன அகல் இலைச் சேம்பின்
5
பிண்டம் அன்ன கொழுங் கிழங்கு மாந்தி,
பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு,
யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப்
பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன,
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
10
அலங்கு குலை அலரி தீண்டி, தாது உக,
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர,
கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து,
கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின் தோட்
15
பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து, என்றும்,
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி
'எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக்
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறைத்
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' என,
20
கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை
முன் தான் கண்ட ஞான்றினு ம்
பின் பெரிது அளிக்கும், தன் பண்பினானே.
தோழி வரைவு மலிந்து சொல்லியது. - பரணர்
336. மருதம்
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப்
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய்
5
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின்,
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின்
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க்
காஞ்சி நீழல் குரவை அயரும்
10
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன்
தேர் தர வந்த நேர் இழை மகளிர்
ஏசுப என்ப, என் நலனே; அதுவே
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்
கொல் களிற்று யானை நல்கல்மாறே;
15
தாமும் பிறரும் உளர்போல் சேறல்
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்,
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச்
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல,
என்னொடு திரியானாயின், வென் வேல்
20
மாரி அம்பின் மழைத் தோற் சோழர்
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை,
ஆரியர் படையின் உடைக, என்
நேர் இறை முன்கை வீங்கிய வளையே!
நயப் புப்பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - பாவைக் கொட்டிலார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:13:09(இந்திய நேரம்)