அருள்மிகு இடையார்பாக்கம் மகாதேவர் திருக்கோயில்
இடையார்பாக்கம் கோயில் தொண்டை மண்டலத்திற்கே சிறப்பானதொரு கட்டட அமைப்பான தூங்கானை மாட வடிவத்துடன் அமைந்துள்ளது. இக்கோயில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துடன் கூடிய இக்கோயில் விமானம் இருதள அமைப்புடையது. கருவறையின் தேவகோட்ட மாடங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய இறை உருவங்கள் சோழர் கால கலைப்பாணியில் காட்சி தருகின்றன.
- பார்வை 533