அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில்
கி.பி. 1004ல் கோயில் கட்டும் பணி தொடங்கி ஆறே ஆண்டுகளில் சிறப்பாக முடிந்து கி.பி. 1010ல் குடமுழுக்கு நடத்தப்பட்டது. பொதுவாக ராஜகோபுரம் உயரமாகவும், மூலஸ்தான விமானம் உயரம் குறைத்தும் கட்டப்படுவது வழக்கம். சோழர்களின் கட்டடக்கலை முறைப்படி, ராஜகோபுரம் சிறிதாகவும், விமானம் பெரிதாகவும் கட்டப்படுவது மரபாக இருந்தது. அதுபோல், தஞ்சாவூர் கோயில் விமானம் 216 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டது. இக்கோயில் முதலாம் இராஜராஜ சோழனே எடுப்பித்தான் என்பதை அரசனது கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
- பார்வை 2300