முகப்பு |
நெல் |
7. பாலை |
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க, |
||
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப, |
||
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக் |
||
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப, |
||
5 |
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் |
|
இன்னே பெய்ய மின்னுமால்-தோழி! |
||
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை |
||
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும் |
||
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே. | உரை | |
பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து பொருள்வயிற்பிரிய,ஆற்றாளாய தலைவிக்குத்தோழிசொல்லியது.-நல்வெள்ளியார்
|
22. குறிஞ்சி |
கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை |
||
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி |
||
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி, |
||
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன் |
||
5 |
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி, |
|
வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர் |
||
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் |
||
வந்தனன்; வாழி-தோழி!-உலகம் |
||
கயம் கண் அற்ற பைது அறு காலை, |
||
10 |
பீளொடு திரங்கிய நெல்லிற்கு |
|
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே. | உரை | |
வரைவு மலிந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.
|
26. பாலை |
நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே- |
||
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை |
||
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப் |
||
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய, |
||
5 |
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய் |
|
முட முதிர் பலவின் அத்தம், நும்மொடு |
||
கெடு துணை ஆகிய தவறோ?-வை எயிற்று, |
||
பொன் பொதிந்தன்ன சுணங்கின், |
||
இருஞ் சூழ் ஓதி, பெருந் தோளாட்கே. | உரை | |
தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை சொல்லி, தோழி செலவு அழுங்குவித்தது.-சாத்தந்தையார்
|
73. பாலை |
வேனில் முருக்கின் விளை துணர் அன்ன |
||
மாணா விரல வல் வாய்ப் பேஎய் |
||
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய, |
||
மன்றம் போழும் புன்கண் மாலை, |
||
5 |
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச் |
|
செல்ப என்ப தாமே-செவ் அரி |
||
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச் |
||
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும் |
||
பூக் கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என் |
||
10 |
நுதற் கவின் அழிக்கும் பசலையும், |
|
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே. | உரை | |
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது.-மூலங்கீரனார்
|
180. மருதம் |
பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை |
||
கழனி நாரை உரைத்தலின், செந்நெல் |
||
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன் |
||
பலர்ப் பெறல் நசைஇ, நம் இல் வாரலனே; |
||
5 |
மாயோள், நலத்தை நம்பி விடல் ஒல்லாளே |
|
அன்னியும் பெரியன்; அவனினும் விழுமிய |
||
இரு பெரு வேந்தர், பொரு களத்து ஒழித்த |
||
புன்னை விழுமம் போல, |
||
என்னொடு கழியும்-இவ் இருவரது இகலே. | உரை | |
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது.
|
183. நெய்தல் |
தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து, |
||
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி, |
||
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி, |
||
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து, |
||
5 |
உமணர் போகலும் இன்னாதாகும்- |
|
மடவை மன்ற-கொண்க!-வயின்தோறு |
||
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் |
||
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே; |
||
இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த |
||
10 |
வறு நீர் நெய்தல் போல, |
|
வாழாள் ஆதல் சூழாதோயே. | உரை | |
வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி சொல்லியது.
|
190. குறிஞ்சி |
நோ, இனி; வாழிய-நெஞ்சே! மேவார் |
||
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த் |
||
திதலை எஃகின் சேந்தன் தந்தை, |
||
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி, |
||
5 |
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் |
|
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன |
||
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய, |
||
வலை மான் மழைக் கண், குறுமகள் |
||
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே! | உரை | |
பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது; அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்; இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்.
|
195. நெய்தல் |
அருளாயாகலோ, கொடிதே!-இருங் கழிக் |
||
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி, |
||
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும் |
||
மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே- |
||
5 |
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, |
|
நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென, |
||
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் |
||
நீர் அலைத் தோற்றம் போல, |
||
ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே. | உரை | |
களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.
|
254. நெய்தல் |
வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும், |
||
குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும், |
||
துனி இல் நல்மொழி இனிய கூறியும், |
||
சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச் |
||
5 |
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப! |
|
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் |
||
அயினி மா இன்று அருந்த, நீலக் |
||
கணம் நாறு பெருந் தொடை புரளும் மார்பின் |
||
துணை இலை தமியை சேக்குவை அல்லை- |
||
10 |
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி, |
|
வானம் வேண்டா உழவின் எம் |
||
கானல்அம் சிறு குடிச் சேந்தனை செலினே | உரை | |
தோழி படைத்து மொழிந்தது.-உலோச்சனார்
|
275. நெய்தல் |
செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக் |
||
காணார் முதலொடு போந்தென, பூவே |
||
படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத் |
||
தன்னுறு விழுமம் அறியா, மென்மெல, |
||
5 |
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் |
|
பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்கு |
||
யான் நினைந்து இரங்கேனாக, நோய் இகந்து, |
||
அறனிலாளன் புகழ, எற் |
||
பெறினும், வல்லேன்மன்-தோழி!-யானே. | உரை | |
சிறைப்புறமாகத் தலைமகனது வரவுணர்ந்து வற்புறுப்ப, வன்புறை எதிர்மொழிந்தது.-அம்மூவனார்
|
311. நெய்தல் |
பெயினே, விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி, |
||
இருங் கதிர் நெல்லின் யாணரஃதே: |
||
வறப்பின், மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து, |
||
இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும், |
||
5 |
அழியா மரபின் நம் மூதூர் நன்றே- |
|
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி, |
||
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; |
||
ஒன்றே- தோழி!-நம் கானலது பழியே: |
||
கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி, |
||
10 |
இருங் களிப் பிரசம் ஊத, அவர் |
|
நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே. | உரை | |
அலர் கூறப்பட்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது.-உலோச்சனார்
|
350. மருதம் |
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ, |
||
பழனப் பல் புள் இரிய, கழனி |
||
வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும் |
||
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என் |
||
5 |
தொல் கவின் தொலையினும் தொலைக! சார |
|
விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக் |
||
கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை |
||
சாடிய சாந்தினை; வாடிய கோதையை; |
||
ஆசு இல் கலம் தழீஇயற்று; |
||
10 |
வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே! | உரை |
தலைமகள் ஊடல் மறுத்தாள் சொல்லியது.-பரணர்
|
367. முல்லை |
கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை |
||
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து, |
||
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு |
||
சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால் |
||
5 |
||
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி |
||
மெல் இயல் அரிவை! நின் பல் இருங் கதுப்பின் |
||
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத் |
||
தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை |
||
10 |
இளையரும் சூடி வந்தனர்: நமரும் |
|
விரி உளை நன் மாக் கடைஇ, |
||
பரியாது வருவர், இப் பனி படு நாளே. | உரை | |
வரவு மலிந்தது-நக்கீரர்
|
373. குறிஞ்சி |
முன்றிற் பலவின் படு சுளை மரீஇ, |
||
புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை |
||
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி, |
||
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு |
||
5 |
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி, |
|
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப் |
||
பா அமை இதணம் ஏறி, பாசினம் |
||
வணர் குரற் சிறு தினை கடிய, |
||
புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே? | உரை | |
செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|
400. மருதம் |
வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும் |
||
நெல் விளை கழனி நேர் கண் செறுவின், |
||
அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய |
||
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர! |
||
5 |
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று, |
|
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ? |
||
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, |
||
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த |
||
கேண்மையொடு அளைஇ, நீயே |
||
10 |
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே. | உரை |
பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின், 'நின் இன்று அமையாம்' என்று சொன்னமையான் என்பது.-ஆலங்குடி வங்கனார்
|